
குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வைத்து கொள்ள வேண்டுமானால் பெற்றோர்கள் அவர்களின் தொலைபேசியை கண்காணித்தல் வேண்டும்.
குழந்தைகள் பயன்படுத்தும் சில மென்பொருள் (Apps) ஆபத்தான மென்பொருள் என்னும் விடயம் அச்சுறுத்தக் கூடியது தான்.
தொழில்நுட்ப விழிப்புணர்வில் பின்தங்கி இருக்கும் பெற்றோர்களை மிகவும் எளிதில் ஏமாற்ற இக்கால குழந்தைகள் துணிகின்றனர்.குழந்தைகள் பதிவிறக்கும் எல்லா மென்பொருள்களும் (Apps) நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள பயன்படும் எளிய வழி என்று நிறைய பெற்றோர்கள் நம்பி விடுகிறார்கள்.
தொழில்நுட்ப விழிப்புணர்வில் பின்தங்கி இருக்கும் பெற்றோர்களை மிகவும் எளிதில் ஏமாற்ற இக்கால குழந்தைகள் துணிகின்றனர்.குழந்தைகள் பதிவிறக்கும் எல்லா மென்பொருள்களும் (Apps) நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள பயன்படும் எளிய வழி என்று நிறைய பெற்றோர்கள் நம்பி விடுகிறார்கள்.
அவற்றின் பயன்பாடுகள், உரைகள் (text), படங்கள் எல்லாவற்றையும் அவசியம் கண்காணித்தல் வேண்டும். அவர்கள் தங்கள் அந்தரங்கத்தை பெற்றோர்கள் தோண்டுகிறார்கள் என்று கோபம் அடையலாம், ஆனால் பெற்ற குழந்தைகளை நெருப்பில், ஆபத்தில், அழிவில் இருந்து காப்பாற்ற நல்ல பெற்றோர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தயக்கம் தேவையில்லை. எனவே, நீங்கள் உங்கள் குழந்தை தொலைபேசியை கண்காணிக்கத் தவறாதீர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ள ஏழு ஆப்ஸ் பற்றி விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

இச்செய்தி பகிர்வு ஜிபிஎஸ் டிராக்கிங் மூலம் நிர்ணயிக்கப்பட்டு பின் நெருக்கமாக இருக்கும் ஐநூறு யாக்கர்களுக்கு பகிரப்படுகிறது.
குழந்தைகள் வெகுவில் சகசமாக வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் நிறைந்த, தவறான மொழியை மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை மிகவும் கடுமையாக பதிவு செய்கிறார்கள். அறிமுகம் இல்லாதவர் (anonymous posts) அனுப்பும் அநாமதேய பதிவுகள் என்றாலும் நாளடைவில் தயக்கம் இன்றி அந்தரங்கங்களைப் பகிர்ந்து ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள். நிறைய பள்ளிகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




எனினும் ஒத்த நலன்களை அக்கறை கொண்ட அரட்டை கூட்டாளிகளைக் கண்டு முகநூல் கணக்கைஒமேகலில் இணைக்க முடியும். அப்படி இணைத்துவிட்டால் இந்த மென்பொருள் ஒத்த விருப்புடைய அறிமுகம் இல்லாத அந்நியர்களிடம் நம்மை பொருத்த முயற்சி செய்யும். இது குழந்தைகளை பொறுத்தவரை பாதுகாப்பான முறை இல்லை. அந்நியர்களிடம் பேசி அந்தரங்க தகவல்களை கயவர்களிடம் குழந்தைகள் பகிரகூடும், இது ஆபத்தான செயல்.


இறுதியாக முடிந்தவரை குழந்தைகளின் கைபேசிகளை பெற்றோர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது நன்மை. இதன் விபரீதத்தை , ஆபத்துக்களைப் பற்றி குழந்தைகளிடம் தெளிவாக விவரித்து புரியவைப்பது பெற்றோர்களின் கடமை. முக்கியமாக அலைபேசிகளில்,(I PAD) ஐபேட்களில் நாம் இருக்கும் இடத்தை காட்டும் அமைப்பை (location services, or GPS) செயல்படாமல் அணைத்து வைப்பது சாலச்சிறந்தது.
No comments:
Post a Comment