
ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்று கூட்டம் போட்டுப் பேசுவதும் கொடி பிடித்து போராடுவதும் நூறு சதவீத வெற்றியைத் தருகிறதா? என்றால் அது பெரும் கேள்விக்குறியே. இன்று நாம் எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை நெகிழியின் ஆதிக்கமே தலைத்தோங்கியுள்ளது.

இன்று ஒருவர் தூக்கி எறியும் நெகிழிப்பை அவரது பிள்ளைகள், பேரன், பேத்திகள் இவர்களின் பிள்ளைகள் எனப் பல தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
உற்பத்தி:

மக்கள் பயன்பாட்டில் நெகிழியின் பங்கு:


நெகிழி உறைகள் சுற்றப்பட்டு வரும் உணவுப்பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப்பொருட்களான, பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது. மேலும் இயற்கையாக வாழை இலை போட்டு உணவருந்தி வந்த மக்கள் தற்போது “கம்ப்யூட்டர் வாழை இலை” என்ற பெயரில் பிளாஸ்டிக் வாழை இலைகளை, பல உணவு விடுதிகளும், வீட்டு விசேசங்களுக்கும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த இலையின் மேல் சூடான திட, திரவ உணவுப் பொருட்களை வைக்கும்போது, வைத்த அந்த இடத்தில் உள்ள நெகிழியானது இளகி, இதில் உள்ள நச்சுப்பொருட்கள் உணவுப்பொருட்களோடு கலந்து, உண்பவருக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
நெகிழியின் தீமைகள்:

2.குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப்பையால் கடுமையாக மாசடைந்துள்ளதால் இந்நீரில் உள்ள நீர்வாழ் உயிரினங்களும், மனிதர்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
3.நெகிழிப்பை, சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஓடும்போது, அதன்மீது நடக்கும் போதும், அதிலிருந்து வரும் காற்றை சுவாசிக்கும் போதும் பல தோற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது.
4. சாலை ஓரங்களில் தேங்கிக்கிடக்கும் நெகிழிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. இதனால் மழைக்காலத்தில் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு இந்த நெகிழிக்குப்பையே முதற்காரணம்.

6.மனிதர்கள் உண்டபின் கீழே போகும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது.
7. மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. மேலும் பயிர்வளர்ச்சியையும் பாதிக்கிறது.
8.நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறுசுழற்சி செய்யும் போதும், உருகும் போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தோல்நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் வரக் காரணமாகிறது.
சிலருக்குத் தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது. மேலும் மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நாம் செய்ய வேண்டியவை:

● எப்பொழுதெல்லாம் கடைக்குச் செல்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் மறக்காமல் கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் நம்மிடம் உள்ள நெகிழிப்பைகளையாவது கடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
● பிளாஸ்டிக் குடுவைகள், டப்பாக்களில் குடிநீர், சாறு, நீர் பை போன்ற அடைத்து வைத்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பாட்டில்களின் அடியில் உள்ள எண்ணைக் கவனித்து அன்றாட வீட்டு உபயோகத்திற்கு பாலி எதிலின் டெபலோட், அடல் பாலி எதிலின், பாரிஸ் லடரின் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பாலி கார்பனேட் பிசி(7) வகை பிளாஸ்டிக்குகள் ஓரளவு பாதுகாப்பானவை.
● பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 1000 ஆண்டுகள். இதில் பிளாஸ்டிக் குடுவை எக்காலத்திலும் அழியாது. எனவே பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் குடுவைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது. ஏனென்றால் இந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. அதனால் இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது.
● நெகிழிப்பைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சட்டப்பூர்வமான விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு பொதுமக்களாகிய நாம் ஒத்துழைப்பும் தர வேண்டும்.

No comments:
Post a Comment