Monday, 27 October 2014

பழங்குடி மக்களின் நாளாக மாறிடும் கொலம்பஸ் நாள்

columbas1கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்கக் கண்டத்தில் பஹமாஸ் பகுதியில் கரையேறிய நாள் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 வது நாள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் நாளாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. அது அமெரிக்க நாட்டின் தேசிய விடுமுறை நாளாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க நாட்டிற்கு வைகிங் இன மக்கள் போன்ற சிலர் முன்னரே வந்து சென்றனர் என்று அறியப்பட்டாலும், பொதுவாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற ஐரோப்பியரே முதன் முதலில் ‘புதுஉலகம்’ எனப்படும் அமெரிக்க நாட்டைக் கண்டுபிடித்தார் என்று கருதப்பட்டு அவரை நினைவு கூரும் நாளாக இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
columbas4கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா, அரசர் ஃபெர்டினாண்ட் ஆகியோரின் நன்னம்பிக்கையையும் பண உதவியையும் பெற்று, ஸ்பெயின் நாட்டிற்காக இந்தியாவுடன் வணிகம் செய்ய ஒரு புதிய கடல்வழித்தடத்தைக் கண்டுபிடிக்க கடற்பயணம் மேற்கொண்டார். பொது ஆண்டு 1492 இல் தொடங்கி தொடர்ந்து பத்து ஆண்டுகளில் நான்கு முறை ஐரோப்பாவில் இருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியப்பெருங்கடலை அடைய விரும்பினார். ஆனால் அவர் ஒரு முறை கூட வெற்றியடையவில்லை என்பதுடன், அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர்கள் எனவும் அழைக்கத் துவங்கினார். இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப்பாதையைக் கண்டுபிடிக்கும் போட்டியில் அண்டை நாடாகிய போர்ச்சுகீசியர்களிடம் ஸ்பெயின் தோல்வி அடைய நேர்ந்தது. வாஸ்கோடகாமா பொது ஆண்டு 1498 மே, 17ல் இந்தியாவில் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார்.
இருப்பினும், ஸ்பெயின் நாடு அமெரிக்கக் கண்டத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டதற்கு கொலம்பஸ் செய்த உதவியே காரணம். அதனால், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தனையோ நாடுகளுக்கு ஸ்பெயின் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஸ்பானிஷ் மொழிதான் இந்நாட்களில் தேசியமொழியும் கூட.   கொலம்பஸ் செய்தது தவறான கணிப்பாக இருந்தாலும் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கக் கண்டத்தில் குடிபுக, ஆட்சி செய்ய ஒரு வழி வகுத்துக் கொடுத்து கடற்பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கொலம்பஸ் என்பதை மறுப்பதற்கில்லை.
கொலம்பஸ் வந்து செல்லும் வரை, ஐரோப்பியர்களுக்கு மேற்கில் ஒரு நிலப்பகுதி இருப்பதும், அங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிப்பதும், அந்த நிலத்தின் மேற்கு எல்லையாக பசிபிக் பெருங்கடல் இருப்பதும் தெரியாது. அட்லாண்டிக் கடலில் மேற்கு நோக்கிப் பயணித்தால் ஆசியக் கண்டத்தையும், சீன நாட்டின் கரையை அடையலாம் என்பதுதான் அவர்கள் எண்ணியிருந்தது.
கொலம்பஸ் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் என்ற கருத்தினால் இத்தாலி நாட்டில் இருந்து குடி பெயர்ந்து நியூயார்க் நகரில் வாழ்ந்த இத்தாலிய மக்கள் அவர் மீது பெருமதிப்பு கொண்டு, முதன் முதலாக அவர் அமெரிக்கா வந்தடைந்த 300வது ஆண்டு நிறைவு நாளான 1792 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியை “அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட நாள்” என மிகப் பெருமையுடன் கொண்டாடினார்கள். ஐரோப்பிய மக்களுக்குப் ஒரு புதிய வாழிடத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் அவர் என்று அப்படி ஒரு பெருமிதம் இத்தாலிய மக்களுக்கு.   பல நகரங்களிலும் தொடர்ந்து இக்கொண்டாட்டம் நடைபெறத் துவங்கியதும், குடியரசுத் தலைவர் பெஞ்சமின் ஹாரிசன் 1892 ஆம் ஆண்டு 400 வது ஆண்டின் கொண்டாட்டமாக அக்டோபர் 12 ஆம் தேதியைக் “கொலம்பஸ் நாள்” என அறிவித்தார். தொடர்ந்து சில ஆண்டுகள் பரவலாக அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அந்நாளைக் கொண்டாட, 1937 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அக்டோபர் 12 ஆம் தேதியை கொலம்பஸ் நாள் என நாடு முழுவதற்கும் தேசிய அளவில் விடுமுறை நாளாகவே அறிவித்தார். நீண்ட வார இறுதி விடுமுறையாகக் கொண்டாடும் பொருட்டு 1971 ஆம் ஆண்டு முதல் இது அக்டோபர் இரண்டாம் திங்களன்று கொண்டாடப்படுவதாக மாற்றப் பட்டது.
columbas3ஆனாலும் பல மாநிலங்கள் கொலம்பஸ் நாளை ஓர்அரசு விடுமுறை நாளாக அங்கீகரிக்க முன்வரவில்லை. இந்நாட்களில் பழங்குடியினர் அதிகமாக உள்ள மாநிலங்கள் பல அந்நாளை ‘பழங்குடியினர் நாள்’ என மாற்றி, அமெரிக்க பழங்குடியினரின் கலாச்சாரத்தையும் அவர்களது துன்பங்களையும் மதிக்கும் நாளாக கொண்டாடுகின்றன. அரசு தேசிய விடுமுறை நாளாக அறிவித்தாலும் தேசியஅரசு அலுவலகங்கள் மட்டுமே அன்று விடுமுறை எடுக்கும் அளவிற்கு இந்நாள் மிகக் குறைந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரும்பான்மையான மக்களும் இந்நாளைப் பொருட்படுத்துவதில்லை. அனைத்திற்கும் மேலாக கொலம்பஸ் நாள் கொண்டாடுவது இப்பொழுது ஒரு சர்ச்சைக்குரிய நாளாகவும் ஆகிவிட்டது.   இந்நாளை எதிர்ப்பவர்கள் அவர்கள் எதிர்ப்பிற்குப் பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.   முக்கியமான சில மறுப்புக் கருத்துகள்:
columbas61. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை. அது ஒரு புதிய, மக்களே வாழ்ந்திராத ஒரு நிலப்பரப்பாகவும் அவர் வந்திறங்கிய பொழுது இருந்ததில்லை. அங்கு முன்னரே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க அமெரிக்காவைக் கொலம்பஸ் கண்டுபிடித்தார் என்று கூறுவது மிகத் தவறான வரலாற்றுச் செய்தி.
2. கொலம்பஸ் நாள் என்று கொண்டாடும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. அவர் செய்ததெல்லாம் இங்கு வாழ்ந்த மக்களை அடிமைப் படுத்தியதும், படுகொலை செய்ததுதான். அவரது வரவு பழங்குடி மக்களின் கலாச்சார அழிவைத்தான் துவக்கி வைத்தது. ஆகவே இதனை மகிழ்ந்து கொண்டாடத் தேவையில்லை.
3. தற்காலத்தில் இந்தக் கொண்டாட்டம் இங்குள்ள மக்களுக்குள் கலாச்சார பேதத்தை உருவாக்குகிறது. நாட்டின் பழங்குடி மக்களை அவமானப்படுத்துகிறது.
4. பள்ளியில் வரலாறு என்ற பெயரில் மாணவர்களுக்கு பொய்யுரைகள் வழங்கப்படுகிறது. கொலம்பஸ் உலகம் உருண்டை என்று தெரிந்து கொண்டதாகவும், துணிச்சலுடன் தனது குழுவினரை வழி நடத்தி புதிய உலகம் கண்டுபிடித்ததாகவும், அவர்கள் தொலைநோக்கிகளைக் பயன்படுத்தியதாகவும் (அவரது கடற்பயணம் நிகழ்ந்த பிறகு ஒரு நூற்றாண்டு கழித்துதான்தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது) உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பல குழந்தைகள் மனதில் திணிக்கப்படுகிறது.
5. பள்ளிகளில் சொல்வதற்கு மாறாக கொலம்பஸ் காலத்திற்கு முன்னரே பலர் உலகம் உருண்டை என்பதை அறிந்திருந்தார்கள். கிரேக்க அரிஸ்டாட்டில் அதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் சுட்டிக் காட்டியதுடன், நிலவில் விழும் புவியின் நிழலின் அளவை அடிப்படையாகக் கொண்டு புவியின் சுற்றளவையும் கணக்கிட்டுள்ளார்.
மேற்காட்டியது போன்ற தவறான தகவல்களை மக்களிடம் திணிக்கும் காரணத்தினால் பொறுமை இழந்த சியாட்டில் நகர மக்கள் நகரசபையிடம் வாதிட்டு அந்நாளைப் ‘பழங்குடி மக்களின் நாள்’ என மாற்றும்படி முறையிட்டனர். தீவிர விவாதத்திற்குப் பிறகு வரலாற்றைத் திரித்து பழங்குடியினரை அவமதிக்கும், பொய்வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கும் இந்த நாள் இனிமேல் பழங்குடியினர் நாள் எனக் கூறப்படும் என்றும், பழங்குடி மக்கள் கலாச்சாரத்தைக் காக்கும் போராட்டங்களை மதிக்கும் நாளாகப் போற்றப்படும் என்றும் இந்த மாதம் சியாட்டல் நகரசபையால் அறிவிக்கப்பட்டுவிட்டது.
[ பார்க்க காணொளி: http://www.cnn.com/video/data/2.0/video/politics/2014/10/13/dnt-seattle-changes-columbus-day-name.king.html ]
சியாட்டில் நகரைப் போன்றே மின்னியாபோலிஸ் நகரமும் இந்நாளை பழங்குடியினர் நாள் (“Indigenous People’s Day”) என அறிவித்துவிட்டது. போர்ட்லாண்ட், சியாட்டில் நகரப் பள்ளிகள் கொலம்பஸ் நாளுடன் பழங்குடியினர் நாளும் சேர்த்தே கொண்டாடப்படும் என அறிவித்துள்ளன. தெற்கு டக்கோட்டா மாநில மக்கள் ‘அமெரிக்கப் பூர்வீக குடியினர் நாள்’ (Native American Day) என்றும், ஹவாய் மாநிலம் பொதுவான கோணத்தில் ‘கண்டுபிடிப்பாளர்கள் நாள்’ (Discoverer’s Day) எனவும் முன்னரே அறிவித்துள்ளன. மேலும் சில தென்னமெரிக்க நாடுகள் மக்களின் கண்டனத்திற்குச் செவி சாய்த்து ஹிஸ்பானிக் மக்களின் கலாச்சார பரவலைக் கொண்டாடும் நோக்கில் ‘டியா டி ல ராசா’ (Dìa de la Raza – “Day of the Race”) என்றும், எதிர்த்து நின்ற பழங்குடி மக்களின் வாழ்வியல் வரலாற்று நாளாக ‘டியா டி லா ரெசிஸ்டென்ஸ்சியா இன்டிஜெனா’ (Dìa de la Resistencia Indìgena – “Day of Indigenous Resistance”) என்று மாறுதல்கள் செய்து கொண்டாடுகின்றன.
அமெரிக்க பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பிழையான செய்திகளின் தொகுப்பும் அதற்கான சரியான விளக்கங்களும் …
கொலம்பஸ் இத்தாலியர் என்பது பிழையானது. கொலம்பஸ் இத்தாலியில் பிறக்கவில்லை. இத்தாலி என்ற நாடு உருவானதே 1861 ஆம் ஆண்டில்தான். கொலம்பஸ் பிறந்த 1451 ஆண்டு அக்டோபர் மாதம் அவர் பிறந்த பகுதி அந்நாளைய ஜெனோவா குடியரசின் பகுதியாக இருந்தது. பிறகு அப்பகுதி பிரான்ஸ் நாட்டின் வசமானது. பிற்காலத்தில்தான் இப்பகுதி இக்காலத்தில் உருவான இத்தாலி நாட்டின் பகுதியாக மாறியது. எனவே கொலம்பஸ் இத்தாலி நாட்டில் பிறந்து இத்தாலி நாட்டிற்காகக் கடற்பயணம் மேற்கொள்ளவில்லை.
கொலம்பஸ் அப்பகுதியில் பிறந்தாலும், கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டிற்காக, அந்நாட்டின் வணிக நோக்கம் காரணமாக 1492 முதல் 1503 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நான்கு முறை அமெரிக்க கண்டத்திற்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து கடற்பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட காரணமும் இப்பொழுது முன்வைக்கும் காரணமான ஐரோப்பியர் வாழ புது நிலம் கண்டுபிடிப்பதற்காகவும் அல்ல. இந்தியாவுடன் வணிகம் செய்வதற்கு ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிப்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது. ஆனாலும் அவர் கண்டுபிடித்த நிலபரப்பும் இந்தியா அல்ல, அத்துடன் அவர் இந்தியர் என அடையாளம் கண்ட மக்களும் இந்தியர்கள் அல்ல. அவர்கள் அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர். கொலம்பஸின் பயணத்தினால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாடுதான் அமெரிக்கக் கண்டத்தில் பலகுடியிருப்புகளை ஏற்படுத்தி பலன் கண்டது.
அத்துடன், முதன்முதலில் அமெரிக்க கண்டத்திற்கு வந்த ஐரோப்பியரும் கொலம்பஸ் அல்ல. அவர் வருவதற்கும் 500 ஆண்டுகளுக்கு முன்னரே ‘லீஃப் எரிக்சன்’ (Leif Erikson, 970- 1020) என்ற ஐஸ்லாந்து பகுதி கடற்பயணி ஒருவர் அமெரிக்க கண்டத்திற்கு வந்து சென்றுவிட்டார். நியூ ஃபௌன்ட்லாண்ட் பகுதியில் அந்த வைகிங் இன மக்கள் குடியிருப்புகளையும் ஏற்படுத்தினர். மற்றொரு சீன கடலோடியும் அமெரிக்காவின் மேற்குக் கரையை கொலம்பஸிற்கு முன்னரே அடைந்த தகவலும் உள்ளது. ஐரோப்பியர்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆசிய மக்கள் இரு கண்டங்களையும் இணைக்கும் நிலப்பகுதி வழியாக அமெரிக்க கண்டத்திற்கு குடிபெயர்ந்து பல பழங்குடி இனங்களாக மாயன், அஸ்டெக், இன்கா இனங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், கற்கால மனிதர்களின் ஆயுதங்களும் இங்கு கிடைப்பதும் அறிவியல் கூறும் உண்மை.
இதனால்,   1492 ஆம் ஆண்டு வாக்கில் சாண்டா மரியா, நின்யா, பின்டா என்ற மூன்று கப்பல்களில் தனது குழுவினருடன் கொலம்பஸும் அமெரிக்கா வந்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அதைவிடுத்து, அவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று சொல்வது அபத்தமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பகுதியை, அதாவது கப்பலில் இருந்து படகை கரை நோக்கி செலுத்தி கரையிறங்கும் பொழுது, அங்கு கரையில் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருக்க, தனது கையில் உள்ள கொடியை நாட்டி, நான் இந்த இடத்தைக் கண்டுபிடித்தேன் என அவர் கூறினால் அது ஒரு வரலாற்றுப்பிழை.
கொலம்பஸைப் பற்றி கூறப்படும் தகவல்களில் மறைக்கப்படும் பல வரலாற்றுத் தகவல்கள் …
1. அவர் ஸ்பெயின் அரசியிடம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி நான்கு முறை கடற்பயணம் செய்தும் இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்காமல் அதில் தோல்வியைத்தான் அடைந்தார் என்பதும்,
2. அவர் தனக்குத் தங்கம் கொணர மறுத்த மக்களைச் சித்திரவதைகள், படுகொலைகள் பல செய்தவர், சிறுமிகளை பாலியல் அடிமைகளாக விற்றவர், பழங்குடி மக்களை அடிமைகளாக நடத்தியதுடன், முதன் முதலில் எதிர்கொண்ட பழங்குடி மனிதரையே கைதியாக்கி தனது வெற்றியைப் பறைசாற்றும் ஓர் அடையாளமாக ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றவர் என்பதும்,
3. ஏமாற்றுக்காரர் மற்றும் கொள்ளைக்காரர், தங்கத்தைத் தேடும் தனது முயற்சியில் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை பெருமையாக சொல்லிகொண்டவர், தான் நினைத்தால் பழங்குடிகளை அழிக்கமுடியும் என அகம்பாவத்துடன் தனது நாட்குறிப்பிலும் குறித்து வைத்தவர், இது போன்ற குற்றங்களுக்காக கைகால்களில் விலங்கிடப்பட்டு, ஆளுநர் பதவி பறிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும்,
4. அவரது அமெரிக்கப் பயணம் ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஐரோப்பியர்களையும், அவர்கள் வரவால் அவர்கள் தங்களுடன் பல தொற்று நோய்களையும் கொணர்ந்ததில் பழங்குடியினர் பலர் உயிரிழக்க நேரிட்டதும், அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த 90 விழுக்காடு பழங்குடி மக்களும், அம்மக்களின் கலாசாரமும், மதமும், மொழிகளும் அவர்களால் அழிக்கப்பட்டன என்பதுவும்,
5. கொலம்பஸ் துவக்கி வைத்த ஐரோப்பியக் குடியேற்றத்தின் துவக்கம் அங்கு வாழ்ந்த மண்ணின்மைந்தர்களின் துன்பங்களின் துவக்கத்திற்கு காரணமானது, அவர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலை ஏற்பட்டு, அவர்களது வாழிடங்களைப் பறித்து அவர்களுக்கான முகாம்களை உருவாக்கி அங்கு அவர்களை விரட்டி சிறைப்படுத்தவும், பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பிரித்ததுவும், இன்றுவரை பழங்குடி மக்களை நடத்துவதில் அமெரிக்க மண்ணில் பேதங்கள் நிலைத்திருக்கிறது என்பதுவும் போன்ற தகவல்கள் மறைக்கப்படுகின்றன.
columbas2இவ்வாறு தற்கால அமெரிக்காவில், கொலம்பஸ் ஓர் இணையில்லா வரலாற்று நாயகனா அல்லது மனித குல எதிரியா என சர்ச்சை செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதற்கு உலக மக்களின் மனித பண்பாட்டு விழுமியங்களில் (human values ) காலப்போக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமான மாறுதல்களே காரணம். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொலம்பஸ் கையாண்ட கொத்தடிமைப்படுத்துதல், இனப்படுகொலைகள், பண்பாட்டுச் சிதைப்புகள் ஆகியவை அக்கால மக்களால் தவறாக கருதப்பட வாய்ப்பிருக்கவில்லை. உண்மையில் பல ஐரோப்பியர்கள் தங்கள் கிறிஸ்துவ மதமே மக்களை மீட்டெடுக்க வந்த மதம் என்று நம்பினார்கள். அவர்கள் நினைத்ததற்கு மாறான வழியில் வாழ்பவர்களை ‘காட்டுமிராண்டிகள்’ என்று அவர்கள் முத்திரை குத்தத் தவறியதில்லை. அத்துடன் அவர்கள் கண்ணோட்டத்தில் இவ்வாறு ‘வழிதடுமாறிச் செல்லும்’ மக்களைக் காப்பது அவர்கள் பொறுப்பு எனவும், தங்களைப் போல அம்மக்களை நாகரீக மக்களாக மாற்றுவது அவர்களது கடமை எனவும் ஆணித்தரமாக நம்பினார். பிற இன மக்களை அடிமைப்படுத்துவதோ, பாலியல் வன்முறை செய்வதோ,   மதம் மாற்றுவதோ, அவர்கள் கலாச்சாரத்தைச் சீர்குலைவு செய்வதோ, இனப்படுகொலைகள் செய்வதோ மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றே பலர் உணராது இருந்தனர். அக்குற்றங்கள் புரிபவர்களை, தங்களது இனம், மொழி, மதத்தின் பொருட்டு அரும்பணியாற்றும் நாயகர்களாகவும் போற்றினர். காலத்தின் மாற்றம் காரணமாக முன்னர், இச்செயல்களில் ஈடுபட்ட முன்நாள் வரலாற்று நாயகராகப் பார்க்கப்பட்ட கொலம்பஸ் இன்று மனித குல எதிரியாகப் பலருக்குத் தோற்றம் அளிக்கிறார்.
இந்நிகழ்ச்சிகள் உணர்த்துவது, காலம் மாறிவிட்டது என்பதையும், உலகம் முழுவதும் வரலாறுகள் மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்பதையும்தான். அவ்வாறு வரலாற்றை மீள்பார்வை செய்யும் பொழுது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் புதிய பண்பாட்டு விழுமியக் கண்ணோட்டத்தில் மனித குலத்திற்கு எதிரான அருவருக்கத் தக்க செயலாக தற்கால மக்களால் உணரப்படுகின்றன. கடந்தகாலத் தவறுகளை சீர் செய்யும் முயற்சி மக்களின் மனதில் வேரூன்றத் தொடங்கியதையே கொலம்பஸ் நாளைக் கைவிடும் நோக்கம் தெளிவு படுத்துகிறது. மனிதகுல வரலாற்றில் மனிதர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கு, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருவது முக்கியத்துவம் பெற்றிருப்பது இதிலிருந்து கண்கூடு. இது ஒரு பண்பாட்டு பரிணாம வளர்ச்சி, இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம்.
_____________________________________________________________________________________
மேலதிகத் தகவல்கள் வழங்கும் இணையதளங்களின் பட்டியல்:
Christopher Columbus
http://en.wikipedia.org/wiki/Christopher_Columbus
Christopher Columbus
http://academickids.com/encyclopedia/index.php/Christopher_columbus
Leif Erikson
http://en.wikipedia.org/wiki/Leif_Erikson
What to tell your kid about Christopher Columbus, By David M. Perry, October 11, 2014
http://edition.cnn.com/2014/10/10/opinion/perry-columbus-day-what-to-tell-your-kid/index.html
Instead of Columbus Day, some U.S. cities celebrate Indigenous People’s Day, By Emanuella Grinberg, October 13, 2014
http://edition.cnn.com/2014/10/12/living/columbus-day-indigenous-people-day/index.html
History vs. Christopher Columbus – Alex Gendler
http://youtu.be/GD3dgiDreGc
Ask HISTORY: Did Columbus Really Discover America?
Did Columbus really discover America? Get the full story.

Thursday, 16 October 2014

The Hindu genocide that Hindus and the world forgot

When we can rise our voice for 2,000 Muslims killed in Gujarat, we must cry from the rooftops for 2.4 million Hindus killed in 1971 or the 250,000 Kashmiri Pandits forced out of their homes in Kashmir. Why do we not? 

Public memory is short and fleeting. Events register momentarily like a blip on a radar and are then consigned to some dark corner of our cerebral galaxy. The brain needs to be bombarded with repetitive stimuli or jolted by a single moral turpitude of seismic proportions to evoke a strong and sustained re-sponse. In the absence of such reinforcement, a thought fades away from ones mind and that is the unfortunate tragedy of the Bangladesh genocide.

To ascertain the etiology of this amnesia or selective attention deficit we need to delve deeper into the details of this gory chapter of South Asia. In a massive military operation, code named Operation Searchlight aimed at crushing Bengali aspirations of autonomy, the Pakistan army in March of 1971 unleashed a deadly reign of terror that killed about 3 million Bangladeshis and forced another 10 million to seek refuge across the border in India. 

Estimates of the actual numbers vary from a ridiculous low 26,000 put out by the Pakistan government (Hamood-ur-Rahman Commission) to a high of 3 million circulating in the international media. In a preface to this massacre, Yahya Khan, the military dictator of Pakistan at that time is supposed to have remarked: “Kill 3 million of them and the rest will eat out of our hands.” (Pierre, Stephen and Robert Payne (1973), Massacre, New York: Macmillan, p 50).  The official position from Bangla-desh concurs with the figure of 3 million.

R.J. Rummel in his book, Statistics of Democide: Genocide and Mass Murder Since 1900 (ch.8) concludes: “Consoli-dating both ranges, I give a final estimate of Pakistan’s democide to be 300,000 to 3,000,000, or a prudent 1,500,000.” Even this figure of 1.5 million places this massacre high up in the list of notable world genocides. While the number killed by the Khmer Rouge in Cambodia (in excess of 2 million) may top the Bangladesh genocide, it was carried out over a period of four years in comparison to the nine-month deadly rampage of the Pakistan army: a chilling testimony to the awesome brutality of this massacre.
Who bore the brunt of this genocide? Was it the Bengali Muslims? Were the Bengali Hindus selectively targeted? Or did both communities suffer equally? It is important to know the actual distribution of the casualties for therein may lay the clue to the big unanswered question: Why were the guilty not brought to book?
The killings were not random acts of response to a mass uprising but a meticulously crafted strategy of selective victimization as Rummel indicates in his book: “In East Pakistan (now Bangladesh) (General Agha Mohammed Yahya Khan and his top generals) also planned to murder its Bengali intellectual, cultural, and political elite. They also planned to indiscriminately murder hundreds of thousands of its Hindus and drive the rest into India. And they planned to destroy its economic base to insure that it would be subordinate to West Pakistan for at least a generation to come. This despicable and cutthroat plan was outright genocide.”

A report in the Sunday Times, London (June 13, 1971) corroborates the existence of such a diabolical blueprint: “The government’s policy for East Bengal was spelled out to me in the Eastern Command headquarters at Dacca. It has three elements: 1. The Bengalis have proved themselves unreliable and must be ruled by West Pakistanis; 2. The Bengalis will have to be re-educated along proper Islamic lines. The — Islamization of the masses — this is the official jargon — is intended to eliminate secessionist tendencies and provide a strong religious bond with West Pakistan; 3. When the Hindus have been eliminated by death and fight, their property will be used as a golden carrot to win over the under -privileged Muslim middle-class. This will provide the base for erecting administrative and political structures in the future.”

In a report submitted to the US Senate Judiciary Commit-tee (November 1, 1971) Senator Edward Kennedy further confirms this persecution of Hindus: “Field reports to the US government, countless eye-witness journalistic ac-counts, reports of international agencies such as World Bank and additional information available to the subcommittee document the reign of terror which grips East Bengal (East Pakistan). Hardest hit have been members of the Hindu community, who have been robbed of their lands and shops, systematically slaughtered, and in some places, painted with yellow patches marked ‘H.’ All of this has been officially sanctioned, ordered and implemented under martial law from Islamabad.”

An article in Time magazine dated August 2, 1971 titled Pakistan: The Ravaging of Golden Bengal (external link) categorically concluded: “The Hindus, who account for three-fourths of the refugees and a majority of the dead, have borne the brunt of the Muslim military hatred.”

All this evidence clearly indicates that the Hindu community of Bangladesh was the specially culled out by the Pakistan army for this inhuman treatment. Coming to specifics, let us see whether we can ascertain with a fair degree of accuracy, the ball park figures for the Hindus killed or driven from their homes.
In the senate judiciary committee report, Kennedy indicates that 80 percent of the refugees were Hindu that is 8 of the 10 million; a figure in line with the Time magazine report that suggests that three-fourths of the refugees were Hindu.

The percentage figures follow the same pattern when we look at the people killed. Shrinandan Vyas in an article in The Hindu titled Hindu Genocide in East Pakistan uses population statistics from the Bangladesh Ministry of Planning, Bureau of Statistics to extrapolate the number of Hindus killed by the Pakistan army: a mind-numbing figure of 2.4 million equivalents to 80 percent of the overall total of 3 million emerges. 

While this is not an attempt to underplay or trivialize the sacrifices of Bangladeshis as a whole (Muslim intellectuals were also killed in large numbers), it cannot be denied that the Hindu community of Bangladesh accounted for an astronomically disproportionate share of the dead and paid a price that was more than its due.

A crime like genocide usually involves established institutions like governments or nations. For the criminals to be brought to book one needs a dedicated champion like the legendary Nazi hunter, Simon Wiesenthal, or a driven community who share a commonality with the victims and will not let the perpetrators to rest. The Hindu community has neither.

Logically it would fall upon the Bangladesh government to relentlessly pursue the executors of this horrific massacre. After some half-hearted attempts in the immediate post — 1971 periods, the Bangladesh government has relegated this issue to a back burner. Why they have done so is intriguing? Does it have to do something with Islamic brotherhood and the fact that the victims happened to be predominantly Hindu?

What about the Hindus themselves? The Hindus, wherever they maybe, are afflicted with a strange psychic malady that inhibits them from standing up for their rights or highlighting  atrocities committed against them. Moreover those Hindus, who do so are shouted down by their own brethren. However, in defense of Bangladeshi Hindus, I must say that the continued oppressive religious environment in that country makes any such protest impossible, especially with their limited numbers.

The only other lobby with a special interest in this matter was predominantly Hindu India. I have always felt that India owes a moral responsibility to the Hindus left behind in Pakistan and Bangladesh in 1947. While the Muslim minority of India became a part of a secular republic with equal rights, the Hindu minority of Pakistan (and later Bangladesh) were relegated to second class status through no fault of theirs.

Could India with its famed free and secular media have played a key role? Yes, it certainly could have. And should have. But did not.  

To side with Hindus even if they are right is akin to blasphemy in the vaunted circles of the free Indian media. How else can you explain the relentless crusade against the Gujarat riots that persists even to this day in comparison with the near total silence on the monumental genocide that obliterated 2.4 million Hindus from the face of the earth or the shoddy treatment meted out to the continued ethnic cleansing of a quarter million Hindus from Kashmir? 

All atrocities regardless of the color, caste, creed or religion of the victims must be condemned fair and square and the perpetrators relentlessly pursued till eternity if need be and brought to book. When we can raise your voice for 2,000 Muslims, (the official figures are much less) killed in Gujarat and we should, we must cry from the roof tops for 2.4 million Hindus killed in 1971 or the 250,000 Kashmiri Pandits forced out of their homes in Kashmir. Why do we not?

Tuesday, 14 October 2014

ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்



எழுத்தாளர் வாசந்தி அவர்களின் ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன கதைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து வாசந்தி எழுதியிருந்தது என்ன என்பதும் ஊகிக்க முடியுமே தவிர எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் வாசந்தி தன் நேர்காணலில் ஜெ பற்றி சொல்லும் போது
She wants to project herself as the Immaculate Virgin. She is Amma.
என்று சொல்லுகிறார்.
ஜெ வுக்கு என்ன காரணம் கொண்டும் தன்னை மாசற்ற ஒரு கன்னியாக காட்ட வேண்டிய அவசியமே இல்லை.
அவர் அப்படி காட்டியதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரின் ஆள், அரசியல் வாரிசு, அவர் விரும்பிய பெண், அவரின் காதலி, ரகசிய மனைவி(இந்த சொற்பிரயோகமே சரியில்லைதான்!!) சின்னவீடு ..

இப்படியான ஏதோ ஒன்றாகத்தான் அவரைத் தமிழ்நாட்டின் பெண்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
எம்ஜிஆரின் வாரிசாக இப்படித்தான் ஜெ , பெண்கள் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும் விருப்பமும் எம்ஜிஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது, அவர் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்த ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது. அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக..

உண்மை இப்படி இருக்க, ஜெ தன்னை ஒரு மாசற்ற கன்னிப்பெண்ணாக காட்டுவதையே விரும்பினார் என்று அவர் எப்போதும் சொல்லாத ஒரு செய்தியை வாசந்தி இட்டுக்கட்டி சொல்வதன் காரணம் என்ன?

ஆண் – பெண் உறவில் திருமணம் என்ற சமூகம் அங்கீகரித்த ஓர் உறவிலிருந்து விலகி / விலக்கப்பட்ட ஒரு பெண் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவள் கட்டாயம் மாசற்ற கன்னிப்பெண்ணாக மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற ஆணாதிக்க மரபு சிந்தனையை ஏன் வாசந்தி அவர்கள் ஜெ மீது வலிய சுமத்துகிறார்?

ஜெ வின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இணைத்துப் பேசப்பட்ட எம்ஜிஆரின் மரணத்தில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது
கூட்டத்திலிருந்த அனைவரும் பார்க்க அவர் பலவந்தமாக இறுதியாத்திரைக்குப் புறப்பட்ட ஊர்தியிலிருந்து இறக்கப்பட்டார்.
அவர் திரைப்படங்களில் நடித்த எந்த ஒரு காட்சியையும் விட மிகவும் உருக்கமாக இருந்த ஒரு காட்சி அதுதான்.
அப்போது ஜெவுக்காக பரிந்துப் பேசவோ ஆதரிக்கவோ அக்கூட்டத்தில் யாருமில்லை. ஜெ என்ற ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணுடன் இருந்தஉறவு / நட்பு கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டின் காங்கிரசு தலைவராக இருந்த மூப்பனார் போன்றவர்கள் ஜெ வை ஓர் அரசியல் தலைவராகக் கூட வேண்டாம், ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவராகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மூப்பனாரைப் பொறுத்தவரை ஜெ என்றுமே ஒரு சினிமா நடிகை, அவ்வளவுதான்.
ஒரு சினிமா நடிகரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான உறுத்தல்களும் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதுவே ஒரு நடிகை என்று வந்துவிட்டால், நடிகை எல்லாம் அரசியல் தலைவராக வரலாமா? என்ற ஆதிக்க மனப்பான்மை அரசியல் கூடாரங்கள் எங்கும் இருக்கிறது. இன்றும் கூட ஓட்டு வாங்குவதற்கு , மிஞ்சிப் போனால் பாராளுமன்றத்தில் எதுவுமே பேசாமல் இருக்கிறமாதிரி ஒன்றிரண்டு திரைப்பட நடிகைகள், குறிப்பாக ரிடையர்ட் நடிகைகள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் தலைவராக அல்ல! என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் குஷ்புவின் அரசியல் நுழைவும் திடீர் விலகலும் கூட இந்த வகைப்பட்டதுதான்.

அரசியலின் இச்சூழலில் தான் ஜெ நம் சமூகத்தில் விலக்கப்பட்ட அனைத்து அடையாளங்களுடனும் ஓர் அரசியல் தலைவராக்
நுழைகிறார். அரசியலின் இந்த அகம் அறியாதவர் அல்ல ஜெ. மிகவும் நன்றாக அறிந்தவர்தான்.


புரட்சித்தலைவி என்ற அடையாளத்துடன் நுழைந்த ஜெ அதே தொடர முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அம்மா என்ற சொல்லை விட புரட்சித்தலைவி என்ற சொல் உலக அரசியலின் அடையாளத்துடன் ஒத்துப்போகும் சொல். கலகக்குரலின் அடையாளம். ஆனால்..அதைத் தொடர்வதில் அல்லது அந்த அடையாளத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்வதில் ஜெ வுக்கு சிக்கல்கள் பல இருந்தன. அதற்கும் இந்த சமூகத்தின் ஆண்-பெண் உறவுச்சிக்கலே முதன்மையான காரணமாக இருந்தது.

எம்ஜிஆர் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படுகிறார்.
புரட்சித்தலைவர் என்ற ஆண்பாலின் பெண்பால் சொல் புரட்சித்தலைவி. இந்தச் சொல் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் என்ற ஆண்மகனுடன் ஜெ என்ற பெண்ணுக்கிருந்த இச்சமூகம் அங்கீகாரம் தாராத ஒரு அடையாளத்தை மட்டுமே சுமந்து நிற்கும்.
அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை.
இக்காலக்கட்டத்தில் தான் ரொம்பவும் தற்செயலாக வந்துசேர்கிறது “அம்மா” என்ற அடையாளம்.
புரட்சித்தலைவி”அம்மா” என்ற அடையாள வட்டத்தில் வந்ததன் உளவியல் இப்படித்தான் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.
அந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது. அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார். ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும் அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.
பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய இந்த தமிழ்ச்சமூகம் ஜெ வைக் கொண்டாடுவது என்பது அரிது என்பதை அவர் அறிவார். என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது. இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் அதிகார மையத்தில் ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் “அம்மா” என்ற சொல் அவருக்கு ஒரு கவசமாக இருந்தது. அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.


தந்தை பெரியாரை விட்டு விலகி வந்த திமுகவும் சரி, திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் சரி, தங்களுக்கு என்று எந்த அரசியல் சித்தாந்தத்தை தனியாக வளர்த்தெடுத்தார்கள் என்பது இன்றுவரை கேள்விக்குறி தான். ஆனால் அடையாள  அரசியலை வளர்த்தெடுத்ததில் திமுகவின் வழியையே அதிமுக வும் பின்பற்றியது. இரு கட்சிகளும் சித்தாந்த ரீதியாக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக உணர்ச்சி அரசியல் உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.
திமுகவின் தலைவர் “அண்ணா” என்றானப் பின் அவர் தொண்டர்கள் அனைவரும் அவர்மீது கேள்விக்கு அப்பாற்பட்ட பாசங்கொண்ட தம்பியராக மாறினார்கள். அரசியல் பாடங்களை “தம்பிக்கு” எழுதிய கடிதங்கள் மூலம் நடத்தினார் அண்ணா அவர்கள். அவருக்குப் பின் திமுக அரசியலில் தலைமைப் பொறுப்புக்கு வந்த கருணாநிதி அவர்கள் “கலைஞர்” ஆனார். அவர் தன் தொண்டர்களை “உடன்பிறப்பே” என்று விழித்தார். அவரிடமிருந்துப் பிரிந்த எம்ஜிஆரும் உடன்பிறப்பின் இன்னொரு நாடக வசனமான ” என் ரத்தத்தின் ரத்தமே” என்று ஆரம்பித்தார். இந்த வழியில் வந்த ஜெ அவர்கள் இவர்கள் அனைவரையும் மிஞ்சிய இடம் தான் இந்த ” அம்மா” என்ற அவதாரம்!

திராவிட சமுதாய வரலாற்றில் இந்த “அம்மா” என்ற உறவுக்கு நீண்ட நெடிய மரியாதைக்குரிய இடம் உண்டு.

திராவிட சமூகம் தாய்வழிச் சமூகம். தாயைக் கொண்டாடிய சமூகம்.
தமிழர்களின் கடவுளான குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் குமரன்.
இந்தக் குமரனின் தாய் குமரி. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் அம்மன் குமரி தான். குமரன் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் குமரி, குமரனின் காதலியோ மனைவியோ அல்ல. அவன் தாய், குமரனின் அம்மா… இப்படிப் போகிறது தமிழ்ச் சமூகத்தின் தொல்லியல் கதை. தமிழ்ச்சமூகத்தின் தாய்வழி உறவை, அந்த உறவின் அடையாளமான “அம்மா” என்ற சொல்லை ஜெ தன் அடையாளமாகக் காட்டும் போது, இதுவரை ஜெ என்ற பெண்ணின் மீது வீசப்பட்ட கறைகள் தானாகவே மறைந்துவிடுகின்றன. ஆண் பெண் உறவில் பாலியல் தொடர்பை விலக்கிய ஒரே சொல் “அம்மா” என்ற சொல் தான்.
அடையாள அரசியலையும் தன் தொண்டர்களை வெறும் உணர்ச்சி விலங்குகளாக மட்டுமே வைத்திருப்பதையும் வளர்த்தெடுத்த திராவிட அரசியலில் காலம் ஜெ வின் மடியில் போட்ட “அம்மா” என்ற சொல் அவருக்கு கிடைத்த வரம். ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் அந்தச் சொல் தாங்கள் வளர்த்தெடுத்த உணர்ச்சி அரசியலின் உச்சம் என்பதையும் அச்சொல்லின் கனத்தையும் வீரியத்தையும் திராவிட அரசியல் நன்கு உணர்ந்தது. அதை உடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதையும் ஜெ வின் அரசியல் எதிரிகள் உணர்ந்தார்கள்.
இம்முறை பதவிக்கு வந்தப் பின் ஜெ அடுக்கடுக்காக கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் “அம்மா ஜெ”வின் பிம்பத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை தமிழகம் உணர்ந்தது. நிழல் அம்மா, அரசியல் அம்மா , வறிய மக்களின் வாழ்க்கையில் நிஜ அம்மாவாக மாறிக்கொண்டு வந்தார். ஜெ வின் அரசியல் எதிரிகளை ரொம்பவும் பயமுறுத்திய இடம் இதுதான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான ஓர் உணர்ச்சி உத்திகளின் அரசியல் காட்சிகள் அரங்கேறியதே இல்லை.
இக்காட்சிகள் தமிழகத்திற்கான சிறப்பு காட்சிகளாகவே இருக்கின்றன.
இந்த உணர்ச்சி உத்திகளைக் கையாளாத எந்த ஓர் அரசியல் கட்சியும் இந்த தமிழ் மண்ணில் கடை விரித்தால் வியாபாரம் செய்ய முடியாது என்கிற நிலைக்கு இன்று வந்துவிட்டது. இதனால் தானோ என்னவோ களப்பணியில் இன்றுவரை தங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருக்கும் இடதுசாரிகளாலும் தமிழ்நாட்டில் அரசியல் தேர்தல் தேர்வுகளில் பாஸ் பண்ணக்கூட முடியவில்லை.
ஒவ்வொரு ஆணும் தன் காலடியில் விழுந்து வண்ங்கும் போது ஜெ முகத்தை கூர்ந்து கவனியுங்கள். அதில் அந்தப் பெண் கடந்து வந்தப் பாதை தெரியும். ஆண் சமூகம் அவளை வஞ்சித்தது தெரியும். ஒரு சாதாரண பெண்ணுக்குரிய அபிலாஷைகளுடன் அவளை வாழவிடாமல் தங்கக்கூண்டில் சிறைவைத்தக் கதையின் பக்கங்கள் பளிச்சிடும்.

ஜெ குறித்த இந்தப் பார்வை பேசப்பட்டிருக்க வேண்டும். அதுவும் வாசந்தி போன்ற ஒரு எழுத்தாளரால். ஆனால் அதை   விட்டுவிட்டு


She wants to project herself as the Immaculate Virgin. She is Amma.

என்று   வாசந்தி புதுக்கதை சொல்வது தான் புதிராக இருக்கிறது.

(ஜெ வின் சொத்துக்குவிப்பு வழக்கு, சிறைத் தண்டனை செய்திகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!)

Monday, 13 October 2014

REAL BIRTH DATE OF JESUS CHRIST

A few things you should know about Christ’s Mass; keep in mind that religious text was written and believed theologically, with little regard for facts or historical precision.  The purpose of this post is to piece together as many historical facts as possible to assist you, the reader, with the ‘when’s and ‘why’s concerning the birth date of Jesus Christ, wherever your studies may lead you.
Truth be told, reading this may only lead to more questions.  But sometimes, you can’t get things right, until you get them wrong, and then make them worse.  To a healthy mind, learning is a right, a privilege and a pleasure.  So empty your cup.  And happy reading!
You may also browse our music page, for songs that are inspired by this, and other similar subjects; such as The Shrine Worshipper and Masquerade.
Jesus holding a cute lamb ba-a-a-a-a-a-a!
First off, why do we celebrate December 25th as the birth date of Jesus Christ?
The biggest turning point in early Christianity was the accession of Constantine I.  During the reign of this man, Christianity went from an underground, criminal movement, to a sanctioned, widely accepted religion of ‘first rank’ within the Roman Empire.  Constantine supported the Church financially, built various basilicas, promoted Christians to high-ranking offices and granted many privileges, including exemption from certain taxes.
Constantine established a precedent for the Roman Emperor within the Church.  The bishops decided on the doctrine – the emperor’s role was to enforce that doctrine, root out heresy, and uphold ecclesiastical unity.  The bishops defined what proper worship was – it was the emperor’s job to ensure that God was worshipped properly by civilians & citizens of the empire.  From this point in history, religion became the figure of authority, gaining direct control of the masses.  Mind you, this is the same man that had his wife, Fausta, and son, Crispus, executed because they contradicted his agenda.
In order to gain religious supremacy, Constantine ordered members of the church to officially celebrate the birth of Jesus on December 25th, in 325 AD - shortly after Pope Julius (320 AD), and later reinforced by Bishop Liberius (354 AD).  Why?
Happy birthday Jesus Candy Cane
This was the perfect ploy to subtly convert the roman/pagan majority to Christianity.  Northern pagans celebrated Yule on December 25th; ancient Babylonian pagans honored Horus, son of Isis, on December 25th; the very Romans honored Saturn, the god of agriculture, all many years before Christians adopted the same date. Ok, so pretty much every winter-solstice variant was celebrated on December 25th, until Christianity dominated the date.  Christians also adopted a variety of traditions from these winter-solstice variants, including music & caroling, gifts, a special feast, decorations, etc.  This made it more comfortable for non-Christians to accept these efforts of wiping out their culture.  These winter -solstice celebrations are hardly known anymore; they’ve almost been wiped out entirely.
Funny thing is, it’s very unlikely that Jesus was born on December 25th.  Though the dates of his birth & death are not covered in the bible, here are some references in the bible that can help us pin point a more precise date.
“Luke 1:26: In the sixth month of Elizabeth’s pregnancy, God sent the angel Gabriel to Nazareth, a town in Galilee.”
Accounts on Mary’s cousin, Elizabeth and her son, John the Baptist, help determine that Jesus was not born in December.  When the angel Gabriel visits Mary, her cousin Elizabeth was already in her 6th month of pregnancy, approximately.  This was some time during December.  Jesus is born 9 months later.  Since John the Baptist was born in April, five or six months prior to Jesus, this places the birth of Jesus Christ around August to early September; definitely not December, unless Mary was pregnant for 12 months. Let’s assume this story about Gabriel is true; that Mary & Elizabeth didn’t make it up to hide an infidelity.  After all, Mary was only a teenager - a very confused teenager – at the time.
“Luke 2:8: And there were shepherds living out in the fields nearby, keeping watch over their flocks at night.”
The book of Luke, of the four canonical gospels (the book that covers Jesus’ birth), describes spring or autumn around the time of Jesus’ birth, not winter.  Luke specifically mentions Shepherds in their fields, watching over their flock at night.  You will not see shepherds parading their livestock in December. Between predators and the freezing cold, sheep especially, die.  The Romans did not issue census during winter, for it was too cold to ask civilians to travel to the city of their father’s for tax purposes. If a 9-month pregnant Mary were to travel to Bethlehem during winter, it is much more likely she’d be found face down in the snow – and I wouldn’t be writing this post.
“Luke 3:22 Now when all the people were baptized, Jesus was also baptized.”  The Baptism of Jesus Christ took place at the beginning of his 30th year of age.  His first Passover took place six months after that.
“John 19:14: It was the day of Preparation of Passover week, about the sixth hour.  “Here is your king”, Pilate said to the Jews.”  Jesus then dies during Passover… at 33 & a half years old.  Passover is in March/April, depending on your calendar.  Again, this places the birth of Jesus Christ around August to early September.
So, why celebrate the birth date of Jesus Christ on December 25th?  Why believe it at all?  To put things mildly, December 25th was not the birth of Christ; we still cannot pinpoint an exact date for his birth or death.  What we do know, is that December 25th is the turning point in history when the Christian religion took authority, to forcefully oppress other’s beliefs and their “holy days”.  That oppression has spread worldwide, like a virus.
Today, most people believe (and celebrate) without questioning, without knowing why – and perhaps most self-destructive of all – without caring.  The media takes things a step further: Thanks to the religious paradigm, your “beliefs” concerning December 25th are exploited and reduced to the worship of aggressive marketing & lavish gifts.  Hypocrisy stacked upon hypocrisy, like Black Friday after Thanksgiving.  This is the kind of unjustified brainwashing that separates us all.
It’s one of my biggest wishes that the masses will stop following religious/cultural traditions blindly and learn, instead, to think.

Saturday, 11 October 2014

MEDIA SILENT As Scientists Successfully KILL CANCER With Magnets

In South Korea, scientists used a magnetic field to get cancer cells to actually self-destruct. The body removes old, defective, and infected cells through the process of programmed cell death (PCD), or apoptosis. In apoptosis, the rejected cell responds to certain signals sent by the body by fragmenting. Immune cells then consume these fragments. The magnets help trigger apoptosis. When apoptosis fails, however, rejected cells divide uncontrollably, developing tumors.
Magnets Induce Apoptosis

Professor Jinwoo Cheon of Yonsei University in Seoul and a team of scientists conducted experiments on bowel cancer cells using magnetic fields to induce apoptosis. They attached iron nanoparticles to antibodies, which bind to “receptor” molecules on tumor cells. These molecules cluster when the magnetic field is applied, triggering the “self-destruct” signal and thereby apoptosis. In the experiment, over half of the bowel cancer cells were destroyed when the signal for apoptopic clustering came into effect. Untreated cells remained unaffected and unharmed.
Big Pharma’s Response?

In a related experiment, the scientists performed the same therapy on zebra fish, which caused them to grow unusual tails. More trials are in the works.

    “We have demonstrated that apoptosis signaling can be turned on in-vitro (in the laboratory) and in a zebra fish in-vivo (living) model by using a magnetic switch,” say the scientists.  “Our magnetic switch may be broadly applicable to any type of surface membrane receptors that exhibit cellular functions on clustering.”

    

The study is to be published in the journal Nature Materials.  One must wonder how this form of therapy—one that does not, as of yet, line the pockets of Big Pharma—will develop in the world of traditional medicine. Drug manufacturers (literally) bank on perpetual sickness, and cancer drugs have shown time and again to worsen tumors.

But regardless of any potential alternative treatments, big pharma will continue to push these dangerous ‘solutions’ on the public. Even while numerous cancer-fighting foods like turmeric, ginger, garlic, papaya leaf extract, berries, and many more exist, the pharmaceutical industry and mainstream medicine won’t recognize these as solutions.

Tuesday, 7 October 2014

தவிராத சுங்கத் தவிர்த்தோன்


கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்கு இலக்கியத்தில் ஒரு தனிச் சிறப்புண்டு. இவர் மூன்று சோழ அரசர்களின் (விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன்) அவைகளில் அரசவைக்கவிஞராக இருக்கும் பேறு பெற்றவர். அப்பொழுது இவர் அம்மூவர் மீதும் ‘விக்கிரம சோழனுலா’, ‘குலோத்துங்க சோழனுலா’, ‘இராச ராச சோழனுலா’ என்று  இயற்றிய உலாக்கள் “மூவருலா” என்று அழைக்கப்படுகிறது. இவர் இவ்வரசர்களைப் புகழ்ந்துப் பாடிய இம்மூவருலாப் பாடல்கள் கண்ணி வகையைச்சார்ந்தது.  அதாவது இரண்டு கண்களைப் போன்று, இருவரிகள் கொண்டு அமைவதால் “கண்ணி” என்ற வகையில் அடங்குகிறது.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்  மூவருலாவில்  இம்மூன்று மன்னர்களின் புகழையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.  அவ்வாறு பாடுகையில் அவர்களது முன்னோர்களான பிற சோழ மன்னர்களையும் போற்றிப்பாடி, இத்தகைய முன்னோர்களின் வழி வந்தவனே என்றும் பாடுகிறார்.  இவ்வாறு பாடுகையில் ஒவ்வொரு மன்னனின்  உலாவிலும் 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகளை முதற்குலோத்துங்கனின் சிறப்பிற்காக ஒதுக்கியுள்ளார். அதிலும் அனைத்து உலாக்களிலும்   அவற்றின் 26 ஆவது கண்ணிகள்  முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த செய்கையைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.
விக்கிரம சோழனுலா:
… உடலை
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி …  (26)
குலோத்துங்க சோழனுலா:
…எங்கோன்
புவிராசராசர்  மனுமுதலோர்  நாளில்
தவிராத சுங்கத் தவிர்த்தோன் …  (26)
இராச ராச சோழனுலா:
… நாடும்
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
உலகை முன்காத்த வுரவோன் …  (26)
முதலாம் குலோத்துங்கன் “சுங்கம் தவிர்த்த சோழன்” என்ற சிறப்புப் பெயருடையவன் ஆவான். “சுங்கம் தவிர்த்து இருள் நீக்கி உலகாண்ட குலோத்துங்க சோழ தேவன்” எனக் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. கி.பி. 1194 கல்வெட்டு ஒன்று “சோழ நாட்டில் சுங்கம் வசூலிப்பதில்லை” (288 – 1907)  என்று சுட்டுகிறது. சோழநாட்டில் நிலவரிகள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக்குடி (‘கரந்தட்டாங்குடி’ என்றும் சுருக்கமாக ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படுகிறது) ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது (374 – 1908).
நாட்டு மக்களின் வரிப்பளுவை உணர்ந்து, சோழர்களின் ஆதிகாலத்து மனுநீதிச் சோழன் காலம் முதல் பண்டு தொட்டு வசூலிக்கப்பட்டு வந்த  சுங்கவரியை நீக்கியவன் குலோத்துங்கன் என்கிறார் ஒட்டக்கூத்தர். அதனால் சுங்க வரி நீக்கியதன் சிறப்பும் தெளிவாக விளக்கப்படுகிறது.
இந்த முதலாம் குலோத்துங்கனே சாளுக்கிய சோழர்களில் முதன்மையானவன். ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுக்குத் தந்தை, இரண்டாம் குலோத்துங்கனுக்கு பாட்டன், இரண்டாம் இராசராச சோழனுக்கு கொள்ளுப்பாட்டன். இவர்கள் சோழ நாட்டை ஆண்ட காலங்கள் கீழ்காணுமாறு அமைகிறது.
குலோத்துங்க சோழன் I – கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் – கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II – கி.பி. 1133-1150
இராசராச சோழன் II – கி.பி. 1146-1163
ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப் புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1163 வரை என்று வரலாறு குறிக்கிறது.
இவ்வாறு முதற் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்ததற்கு  காரணம் என்ன? அவ்வாறு சுங்கம் தவிர்த்ததால் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வாறு ஈடுகட்டப்பட்டது என்பது வரலாற்று சான்றுகளான, இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. சோழர் வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்களான இராசமாணிக்கனார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோரும் இப்பிரச்சினை குறித்துத் தெளிவுபடுத்தவில்லை.  ஆதலால், இது பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை தங்கள் ஆய்வின்படி முன் வைத்து வருகிறார்கள். இங்கு அவ்வாறு கூறப்பட்ட கருத்துக்களைப்  பார்ப்போம்.  ஆராய்ச்சி முடிவுகள் அரசன் சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற காரணத்தையும் கருத்தில் கொள்வதால், இங்கு குலோத்துங்கன் சோழ மன்னனான வரலாற்றையும் சுருக்கமாக விளக்க வேண்டிய அவசியம் நேரிடுகிறது.
குலோத்துங்கன் வேங்கி நாட்டு சாளுக்கிய அரசின் ஆண் வழித்தோன்றல்.  இவனது தந்தை இராசஇராச நரேந்திரன் என்பான், முதலாம் இராசஇராச  சோழனின் மகள் குந்தவைக்கும், வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த மகன்.  இராசஇராச நரேந்திரன் தனது மாமன் முதலாம் இராசேந்திரனின் மகளான அம்மங்காதேவியை மணந்து கொண்டான்.  சோழ குலத்தோன்றல் அம்மங்கா தேவிக்கும், சாளுக்கிய இராசஇராச நரேந்திரந்திரனுக்கும் பிறந்தவன் குலோத்துங்கன்.  குலோத்துங்கன் என்ற பெயர் அவனது அரசாட்சிக்காகச் சூட்டப்பட்ட பெயர்.  பிறந்த பொழுது தாய்வழிப் பாட்டன் பெயரான இராசேந்திரன் என்னும் பெயரும், தந்தைவழி சாளுக்கிய அரச பெயராக விஷ்ணுவர்த்தன் என்ற பெயரும் பெற்றிருந்தான்.  இவனும் தனது தந்தையைப் போலவே, சோழகுலத் தோன்றலான தனது மாமன் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகியை மணந்து கொண்டான்.
முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பிறகு அவனது மகன்கள் மூவர் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்தனர்.  அவ்வரிசையில் இறுதியாக வீர இராசேந்திரன் சோழன்  அரசனானான். தந்தை வீர இராசேந்திர சோழன் மறைவுக்குப்  பிறகு அரியணை ஏறிய அதிராசேந்திர சோழன்  ஆட்சி காலம் மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் மரணமடைந்தான். இவ்வாறு குறுகிய காலத்தில் அவன்  மரணம் அடைய நேர்ந்ததன் காரணமாக இந்த மரணத்தில் சதி ஏதும் இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு அக்காலத்திலும்,  இக்கால ஆராய்ச்சியாளர்களிடமும்  தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.
அதிராசேந்திர சோழன் இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும், அதிராசேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.  குலோத்துங்கனின் எதிரியான மேலைச்சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனின் அவைப்  புலவர்  ‘பில்கனர்’ என்பார் குலோத்துங்கன் அதிராசேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். மற்றொரு கருத்தின்படி அக்காலத்தில் இருந்த சைவ வைணவ கலவரம் தீவிரமடைந்ததால்,  அக்கலகத்திற்கும் அதிராசேந்திர சோழன்  உயிரிழப்பிற்கும் ஏதோ தொடர்பிருக்கக்கூடும் என்ற ஐயமும் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்து வருகிறது. அத்துடன் அக்காலக்கட்டத்தில் துவங்கிய வலங்கை, இடங்கை படைத்தளங்களுக்குள்ளான சச்சரவுகளும் மன்னனின் மறைவிற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்ற ஐயமும் சிலவரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கிறது.
காரணம் எவ்வாறாயிருப்பினும், முதலாம் இராசேந்திர சோழனின் அரசுரிமை கொண்ட மகன்களும், அவனது மகன் வழிப் பேரன்களும் ஒருவர் பின் ஒருவராய் இறந்துவிட, சோழ அரசுரிமை இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான முதலாம் குலோத்துங்கனிடம் சென்று சேர்ந்தது.  அதன் பிறகு சாளுக்கிய வழி வந்த சோழனனின் குலம் தொடர்ந்து ‘சாளுக்கிய சோழர்கள்’ என்ற பெயருடன்   சோழ நாட்டினை ஆண்டார்கள்.
இவ்வாறாக சோழ அரசுரிமையை  மரபுக்கு முரணாக, தந்தை  வழியில் வேங்கி நாட்டின் சாளுக்கிய மரபினையும், தாய் வழியில் சோழ மரபினையும் கொண்ட  குலோத்துங்கன் பெற்றதற்கும், அவன் சுங்கம் தவிர்த்ததற்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி வருகிறார்கள். குலோத்துங்கன், தனது பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பற்பல உத்திகளைக் கையாண்டான் என்பது இவ்வாராய்ச்சிகளின்  அடிபடைக் கோணமாகும்.
குலோத்துங்கன், சோழ மக்கள் அரசுக்கு ஆண்டுதோறும் செலுத்திவந்த சுங்கம் நீக்கினான்.  இச்சுங்கம் ஏற்றுமதிப் பொருட்களுக்கு இடப்படும் தீர்வையாகும் என்று இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். சுங்கவரி இல்லாத நாட்டில் வாணிபம் பெருகும்; பொருள்கள் வந்து குவியும்; விலைகள் குறையும். இதனாலேயே அவன் இவ்வாறு செய்தான். சுங்கவரி நீக்கியதால் மக்கள் அவனை வாழ்த்திச் சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைத்தனர் என்பதும் ஒரு கருத்து.
குலோத்துங்கன் தனது அரசாட்சியை உறுதிப்படுத்த விரும்பி, கி.பி. 1085-86ஆம் ஆண்டில் உள்நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் விதமாகச் சுங்கவரியை நீக்கி ஆணையிட்டான். இதன் காரணமாக வணிகர் – வேளாளார் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு அரண்களாக மாறினர் என்று என். சேதுராமன் கூறுகிறார்.
சோழநாட்டின் வலங்கை மகா சேனை மற்றும் இடங்கை மகா சேனை என இருந்து வந்த இரு படைக்குழுவினருக்குள்ளும், அவர்கள் சார்ந்திருந்த சாதிப்பிரிவுக்கும் இடையில் கலகம் ஏற்படுத்தி, அந்த கலகத்தின் காரணமாக, அதிராசேந்திர சோழன் மரணத்தை தழுவச் செய்து குலோத்துங்கனுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் வணிகர்கள்.  அந்த வணிகர்களுக்கு பிரதிபலனாக உதவும் வகையில் சுங்கவரி நீக்கி சலுகை அளித்தான் என்று ஆய்வாளர் திரு. தி. நா. சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
மரபுக்கு முரணாகச் சோழ அரச பட்டத்தைக் கைப்பற்றிய முதற் குலோத்துங்கன், தனது பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பலவித உத்திகளைக் கையாண்டான். அரசகுலப் படைகளல்லாத, குடி படைகள் எனத்தக்க சமூகத்தவர் பலரின் நிலையையும் அதிகாரத்தையும் உயர்த்தியது அத்தகைய உத்திகளுள் ஒன்று. இது தென்னிந்தியச் சமூக அமைப்பில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திற்று என்று ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.
சோழ குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள்  வலங்கை மகா சேனை படைவீரர்கள்.  இந்த அரசகுலப் படையின் அதிகாரத்தைக் குறைக்கும் வழியாகவும், அதே சமயம் வணிகர்களுக்கு சலுகை தரும் விதமாகவும் எடுக்கப்பட்ட முடிவு சுங்க வரி நீக்குதல் என்கிறார் எஸ். இராமச்சந்திரன்.  இவ்வாறு குலோத்துங்கன்  எடுத்த முடிவு,  குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற வலங்கை இடங்கைப் பூசல்களுக்கும் இதுவே காரணமாகி இருக்கலாம் என்பதும் இவர் முடிவு.
வணிகர்களுக்குப் பாதுகாப்புப் படையாகச் செயல்பட்டுவந்த அரச குலப்படைகளைக் கலைத்துவிட்டோ, அவ்வீரர்களை வணிகர்களிடமிருந்து ஊதியம் பெறுகின்ற படைகளாக மாற்றி ஆணையிட்டோ,  அரச குலப் படைகளின் மானிய நிலங்களை அரசர்களிடமிருந்து கையகப்படுத்தியோ,  ஏதோ ஒரு வகையில் வணிகர்களின் பாதுகாப்புப் பொறுப்புக்காக அரசு ஏற்றிருந்த செலவினங்களைக் குலோத்துங்க சோழன் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கக்கூடும் என்கிறார் இவர்.
சோழர்காலத்தில் வணிகர்களிடம் வரி வசூலித்து, அந்த வருவாயில் படை அமைத்து, கடல் கடந்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு சோழப்படை பாதுகாப்பு அளித்து வந்தது. முதலாம் இராசேந்திரனின் கடல் கடந்த படையெடுப்புகளின் நோக்கமும் அதுவே.  கடற் கொள்ளையர்களிடம் இருந்து வணிகர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்கும், பலநாடுகளுடன் வணிக உறவை  மேம்படுத்த சோழ படைகள் உதவின.  இவ்வாறு வணிகத்தை மேம்படுத்தும் பொருட்டு வணிகர்களிடம் வரி வசூலித்து, அதைப் பயன்படுத்தி அதன் வழியாக படைவீர்கள் கொண்டு பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, வணிகர்களின் வரியை நீக்கிவிட்டால் அந்தத் தொகையில் அவர்களே பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும், அத்துடன் அரச படைகளின் அதிகாரத்தையும் குறைக்கும் வழியாகவும் குலோத்துங்கனின் சுங்கம் தவிர்த்த நடவடிக்கை இருந்திருக்கும் என்பது எஸ். இராமச்சந்திரன் அவர்களது கருத்து. இவ்வாறு சுங்க வரி வசூல் செய்வதன் மூலம் ஈடுசெய்யப்பட்டு வந்த ஒரு செலவினம் இப்போது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டதால் சுங்க வரி வசூல் செய்வது தேவையற்ற ஒன்றாக ஆகிவிட்டது என்கிறார் இந்த ஆய்வாளர்.
சான்றுகள்:
[1] “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்) ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் – இதழ் 75 – அக்டோபர்  2008. பக்கங்கள் 28-31. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 600 008. (http://m.sishri.org/msungam.html & http://www.subaonline.net/thfebooks/THFkalvettu42008oct.pdf)
[2] “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்,” எஸ். இராமச்சந்திரன், (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்). பதிப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113, 2004.
[3]The Cholas, N.Sethuraman; பக்கம்  107, “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் -இதழ் 75 – அக். 2008. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8. (பார்க்க: http://www.sishri.org/sungam.html)
[4] திரு. தி. நா. சுப்பிரமணியம் தென்னிந்திய கோயிற் சாசனங்கள்,  மூன்று பாகங்கள்  II சரித்திரக்குறிப்புகள், பக்கங்கள்  87-101 G O M L 1957
[5] சோழர் வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார், பக்கம்  273
[6] இராமானுசர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் – வரலாறா? கற்பனையா?, எஸ். இராமச்சந்திரன், http://www.sishri.org/ramanuja.html
[7] 5.5 முதலாம் குலோத்துங்கன் பரம்பரை, http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312555.htm
[8] முதலாம் குலோத்துங்க சோழன், https://ta.wikipedia.org/s/23o