Sunday, 30 November 2014

உலகின் முதல் மனிதன் தமிழன்!

தமிழே உலகத்தாய் மொழி என்று தேவனேய பாவாணார் கூறுகிறார். தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி. தமிழர் நாகரிகமே உலகின் முதல் நாகரிகம். தமிழனே உலகின் முதல் மனிதன். அது எவ்வாறு எனக் காண்போம்.
தமிழ் திராவிட மொழிகளில் மூத்த மொழி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அது அனைவருக்கும் கண்கூடாக்த் தெரிந்த ஒன்றே. தமிழின் மூன்றாம் தமிழ்சங்கம் மதுரையில் இயங்கியது. அதன் தலைவராக மாங்குடி மருதனார் சிலகாலம் இருந்தார். திருக்குறள் மூன்றாம் தமிழ்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருக்குறள் அரங்கேற்றப்பட்ட காலம் கி.மு.300. சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன்!. உலகின் முதல் ஹைக்கூ கவிதை இயற்றப்பட்டது தமிழகத்தில் 2300 ஆண்டுகளுக்குமுன். அதற்குமுன்பே வெண்பா, ஆசிருயப்பா, என இலக்கணம் வகுத்து வைத்துள்ளனர்.
மூன்றாம் தமிழ் சங்கம் இருந்த காலம் 2500முன், இரண்டாம் தமிழ்சங்கம் இருந்த இடம் கபாடபுரம் எனக்கூறப்படுகிறது. அந்நகரம் தற்போதய கன்னியாகுமரிக்கு அப்பால் தென் திசையில் இருந்ததுவாம்.அச்சங்கம் நிலவிய காலம்? சுமார் 3000 ஆண்டுகளுக்குமுன் என வைத்துக்கொள்வோமா? இது ஒரு குறைந்தபட்ச அளவீடுதான், சரி முதலாம் தமிழ்சங்கம் நிலவிய காலம்? குரங்கிலிருந்து முதன்முதலாக மனிதன் உருவான காலம் என மேலை நாட்டு அறிவியல் கூறும் காலத்திற்கு முற்பட்டது போல உங்களுக்கே தெரிகிறதா?
அண்மையில் கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பல அரசியல் விளையாட்டுகளுக்கு மத்தியில் சில நல்ல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவற்றில் ஒன்று பாரத வரலாற்றின் முதற்படியாகத் திகழும் ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களடங்கிய சிந்துசமவெளி நாகரிகமும் நம் தமிழ் நாகரிகமும் ஒன்றே என மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. அங்ஙனமாயின் சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தமிழர்களே!
மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் களின் வழியாக சிந்து சமவெளிக்குள் வந்தவரள் ஆரியர்கள். ஆரியர்களின் வருகைக்குப்பின் சிந்துசமவெளி நாகரிகம் சீரழிந்தது. சிந்துசமவெளியில் நாம் பேசிய தமிழோடு ஆரியர்களின் நாடோடி மொழியும் இணைந்து சம்ஸ்கிருதம் என்ற வடமொழி உருவானது. ஆக பாரத மொழிகளில் பண்டைய(பழைய) மொழி தமிழே. பாரத நாட்டின் முதல் நாகரிகம் தமிழ் நாகரிகமே!
உலகவரலாற்றில் அதிசயமாகப் போற்றப்படுவதும், பழமையானதுமாகத் திகழ்வது பிரமிடுகளால் பிரமிக்க வைத்த எகிப்தியர் நாகரிகம். பண்டைத்தமிழ் இலக்கியங்களில் நாகர்கள் என்ற சொல் பல இடங்களில் காணக்கூடும். தமிழ் இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நாகர்களுக்கும் எகிப்து பிரமிடுகளில் இருக்கும் மம்மிகளின் உருவங்களுக்கும் அவ்வளவு வேறுபாடுகளில்லை. தமிழர்கள் எகிப்துநாட்டினருடன் வாணிபத்தொடர்பு வைத்திருந்ததால் இவர்கள் நாகர்கள் எனக்குறிப்பிடும் எகிப்தியர்களைப்பற்றி தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது!.
ஆனாலும் அவர்களை விட தமிழர்களே சிறந்த, மேன்மையுற்றவர்களாகத் திகழ்ந்துஇருந்திருக்கின்றனர். ஒரு சிறிய உதாரணம் நாகர்கள் உடை அணியாதவர்கள்!
ஆக தமிழே உலகின் தலைசிறந்த பழ்மையான் மொழி, நாகரிகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
இப்படிப்பட்ட தமிழ்குடியில் பிறந்த தமிழர்களைக் கேட்கிறேன், அந்நிய மொழியைக் கொண்டாடுவதற்கும், அவர்தம் நாகரிகத்தைப் பின் பற்றுவதற்கும் உனக்கு வெட்கமாய் இல்லையா?

Saturday, 8 November 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)



பர்த்வான் குண்டு வெடிப்பு படம்
பர்த்வான் குண்டு வெடிப்பு படம்
மாநில சிபிசிஐடி போலீஸா, என்ஐஏ-வா என்ற வாதம்: பர்த்வான் குண்டுவெடிப்பு அந்த மாவட்டம் மட்டுமே தொடர்புடைய சம்பவமல்ல, அது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதில் அன்னிய சக்திகளுக்கும் தொடர்புள்ளது. முன்னதாக, பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் தேவையில்லாத குறுக்கீடு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்தார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு, ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக உத்தரவிட்டது இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற விவகாரங்களையும் தெரிந்து கொண்ட நிலையில் (சாரதா-போன்ஸி பணம் முதலியவற்றை) அவர் அவ்வாறு எதிர்த்திருப்பாரா என்று தெரியவில்லை.
பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன
பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன
பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டசென்னைவாசிகள்: இவர்களுக்கு உதவியர்கள் கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் உள்ளார்கள் என்பதால், விசாரணை அங்கும் ஆரம்பித்துள்ளன[1]. முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[2]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி
ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி
கைதாகி சென்னையில் இருப்பவர்களுக்கும்இதற்கும் உள்ளதொடர்புகள்: இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்[3].
பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்
பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்
கொல்கத்தாவில் ரகசியமாக சிகிச்சைப் பெற்ற மூன்று நபர்கள்: சென்னையில் ரகசியமான மூன்று பேர்கள் இருந்தது போல, பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடைந்த மூவரை ரகசியமாக, ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வைத்து,. சிகிச்சைக் கொடுத்ததை என்.ஐ.ஏ கண்டு பிடித்துள்ளனர். மேலும் அந்த வசதியை திரிணமூல் காங்கிரஸ்காரர் செய்து கொடுத்துள்ளார்[4]. பார்க் சர்கஸ் நர்சிங் ஹோம் என்ற மருத்துவ மனையில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியுள்ளனர். அவர்கள் தாங்கள் பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடவில்லை, ஆனால், அக்டோபர்.5 அன்று மால்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறிக் கொண்டனர். போலீஸார் நரேந்திர பூரில், இங்கிலீஸ் பஜாரில் குண்டு வெடுப்பு நடந்தத்யாக அறிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் இந்த மூவரை கொல்கொத்தாவிற்கு அனுப்பினாலும், மருத்துவமனை பெயரைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு, தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப் படுவது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.
பர்த்வான் சோதனை -nia
பர்த்வான் சோதனை -nia
சென்னை சென்ட்ரல் – பர்த்வான் குண்டுவெடிப்புகளுக்குள்ள தொடர்பு: மே.1, 2014வ் அன்று சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், கௌஹாதி எக்ஸ்பிரஸில், குண்டுகள் இரண்டு வெடித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்[5]. இப்பொழுது பர்தவான் குண்டுவெடிப்பை விசாரிக்கும் போது, இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ள சம்பந்தம் வெளிப்படுகிறது, குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. இதுதவிர வெடிகுண்டுகளின் தயாரிப்பு முறை, உபயோகப் படுத்தப் பட்டுள்ள ரசாயனப் பொருட்கள் (அம்மோனியம் நைட்ரேட், காரீய ஆக்ஸைடு முதலியன), அவற்றின் கலவை விகிதம் ஒரே மாதியாக உள்ளன. குண்டுவெடிப்பின் தன்மையில் வேறுபாடுள்ளதே தவிர, மற்ற விசயங்களில், இரண்டும் ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன. குண்டுகளைத் தயாரித்தவர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே இடத்தில் கற்றுக்கொண்ட முறையின் மூலம் கற்றுக் கொண்ட முறை என்று தெரிகிறது. மேலும் பர்த்வானில் குண்டு வெடித்தவுடன் ரஜிரா பீபி இந்த மூவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். இதன் மூலம் “ஸ்லீப்பர் செல்” முறையும் வெளிப்படுகிறது.
பர்த்வான் கைது என்.ஐ.ஏ
பர்த்வான் கைது என்.ஐ.ஏ
அருண் செல்வன் தொடர்பு, விசாரணை: மேலும் செப்டம்பரில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அருண் செல்வன் கைது செய்யப் பட்டதும் முக்கியமாகிறது. என்.ஐ.ஏ இந்த விசயத்தில் அவனிடம் விசாரணை மேற்கொண்டது.  ஏனெனில், பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தப் பட்ட இடங்களில், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் சிக்கின. அவை அருண் செல்வராஜ் எடுத்து அனுப்பியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. மேலும் கௌஹாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வைக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் இருக்கக் கூடும், உண்மையில், தமிழகத்திலிருந்து வெடிப்பொருட்கள், ரசாயன கலவைகள் முதலியன அசாமிற்கு எடுத்தச் செல்ல முயன்றிருக்கலாம். அம்முயற்சியில், சரியாக கையாளப் படாதலால், தவறி வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எது எப்படியாகிலும், தமிழகத்திற்கும் ஜிஹாதிகளுக்கும் உள்ள தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.
பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு
பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு
சாரதா-போன்ஸி ஊழலுக்கும், வங்காளதேச தீவிரவாத குழுக்கும் உள்ள சம்பந்தம்[6]: சாரதா-போன்ஸி ஊழலில், பணம் வங்காள தேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வங்கிற்குச் சென்றதை அமுலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. இது ஊழல் பணத்தை நல்ல பணமாக்கும் அல்லது கணக்கில் உள்ள பணம் போல காட்டும் முயற்சி என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சுமார் ரூ.60 கோடிகள் இவ்வாறு வங்காளதேச இஸ்லாமிய வங்கிக்கு, மேற்கு வங்காள அரசியல்வாதிகள் மூலம் சென்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு விசாரணை மூலம், இவ்விவரங்களை ஆராய நேர்தால், திரிணமூல் முகமூடி கிழிந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். ஒரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை ஏமாற்றி, ஆனால், அதே பணத்தை தீவிரவாத செயல்களுக்கு திருப்பிவிடும், திரிணமூல் காங்கிரஸ்காரர்களைரேன் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த இஸ்லாமிய வங்கிற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கும் தொடர்புள்ளது. இதன் மூலம் ஜே.எம்.பிக்கு பணம் சென்று, அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் வந்திருக்கும்[7]. இப்பணத்தினால், இவர்கள் பர்த்வானில் இடத்தை வாங்கி, அங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.

Friday, 7 November 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)



Abdul Hakim alias Hassan at Burdwan hospital.
Abdul Hakim alias Hassan at Burdwan hospital.
குண்டு தயாரிப்பு தொழிற்சாலை நடத்தும் ஜிஹாதிகள்: “பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர்”, என்று போலீஸாரே ஒப்புக் கொண்ட பிறகு, இதைப் பற்றி மற்றவர்கள் ஆராயத் தொடங்கினர்.  அதன் மூலம் பல விசயங்கள் வெளிவந்தன. ஜமாத்-உல்-முஜாஹித்தீன் வங்காளதேசம் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] இந்திய முஜாஹித்தீன் [ Indian Mujahideen (IM)] மற்றும் அல்-ஜிஹாத் [ Al Jihad, a new outfit with bases in Pakistan] பாகிஸ்தானின் புதிய ஜிஹாதி இயக்கம் முதலியன இந்த குண்டு தயாரிப்பு தொழிற்சாலையில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது[1]. அதாவது அண்டைநாடுகளிலுள்ளா ஜிஹாதி அமைப்புகள் கைகோர்த்துக் கொண்டு வேலை செய்கின்றன என்றும் தெரிகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாத செய்களில் ஈடுபட்டு வருவதை, மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்கு உதவி வருவது தான், விசாரணையில் மறுபடி-மறுபடி தெரிய வருகிறது.
Hasan Molla - burdwan-blast
fbgtHasan Molla – burdwan-blast
தீவிரவாத குற்றங்களில் அரசியல் நுழைப்பது: இது பற்றிய விவரங்கள் வெளி வந்தாலும், திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும், அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உறுதியாக வாதித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி கட்சியினர், என்.ஐ.ஏ இதில் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாது, இவ்விசயத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், மத்திய அரசு, என்.ஐ.ஏ மூலம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதோடு, அதற்கு ஆதரவாக, ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். பதிலுக்கு பிஜேபி ஒரு ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது. ஜிஹாதிகளின் கைவேலை மற்றும் அதன் தீவிரத்தைக் கண்டுகொள்ளாமல் இப்படு அரசியல் செய்து வருவது நடுநிலையாளர்களைத் திடுக்கிட வைத்துள்ளது. ஏற்கெனவே, திரிணமூல் காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்களுக்கு பலமுறைகளில் தாஜா செய்து வருகிறார்கள் – பங்களாதேச அகதிகளை உள்ளே நுழைய வசதி செய்து தருகிறார்கள்; தேர்தல் ரேஷன் அட்டை, அடையாள அட்டை, முதலியவற்றைக் கொடுத்து அவர்களது குடியுரிமையினையும் உறுதி செய்து வருகிறார்கள்;
Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.
Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan. Courtesy – twocircles
டு சர்க்கிள்ஸ் நெட்வொர்க் கொடுக்கும் விவரங்கள்[2]: இது முஸ்லிம் சார்புடைய இணைதளம் என்பதால், அவர்களது கருத்தையும் அறியும் வண்ணம் அவர்களது தகவல்கள் கொடுக்கப் படுகின்றன. மதரஸாவை தவறான முறையில் அடையாளங் காணப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம். இருப்பினும் அவர்கள் கொடுக்கும் விவரங்கள் மற்றும் மேலும் வெளிவரும் விவரங்கள் அவர்களது வாதத்திற்கு ஒவ்வாததாக இல்லை. 11-10-2014 அன்று TCN குழு அங்கு வந்தபோது பதட்டமான நிலையிருந்தது. போலீஸ்கார்ர்கள் அங்கு அதிகமாக குவிந்ததும், ஊடகக் காரர்கள் வந்ததும், அங்கிருக்கும் மக்களுக்கு சங்கடமாக இருந்தது. ஷாநவாஜ் கான் என்கின்ற சோடு [Shahnawaz Khan alias Chhotu] என்பவன் தான் இறந்த உடல்கள் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல போலீஸாருக்கு உதவினான். அவன் அங்கு பிளம்பராக வேலை செய்து வருகிறான். பர்த்வான் போலீஸ் கமிஷனர் – சையது மொஹம்மது ஹொஸைன் மீரஜஜ்[ Burdwan district police chief Syed Muhammad Hossain Meerza], கூடுதல் எஸ்பி – தருண் ஹால்தர் [Additional SP Tarun Halder], SDPO அம்லன் குசும் கோஷ் [SDPO Amlan Kusum Ghosh], அப்துல் கபூர் [IC of Burdwan Abdul Gaffar] முதலியோர் அங்கு வந்தனர். சோதனையிட்ட போது, கீழ்கண்டவை கெண்டெடுக்கப் பட்டன[3]:
  • 59 உடனடி தயாரிப்பு வெடிகுண்டுகள் – உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை [59 improvised explosive devices (IEDs) or home-made bombs],
  • 55 உடனடி தயாரிப்பு கை-வெடிகுண்டுகள் [55 improvised hand grenades],
  • எக்கச்சக்கமான ஜிலேடின் குச்சிகள் [an undeclared number of gelatine sticks],
  • ரசாயனப் பொருட்கள் [chemicals],
  • குண்டுவெடிப்பு-குண்டுகள் தயாரிப்பது பற்ரிய புத்தகங்கள் [explosives-making literature],
  • சிறு-குறும் புத்தகங்கள் [pamphlets, etc.]
  • எரிந்த நிலையில் காணப்பட்ட காகிதங்களில் ஜிஹாத், செசன்யாவில் உள்ள நமது சகோதர்களுக்கு சலாம், முஜாஹித்தீன், ஜவாஹிரி…….போன்ற வார்த்தைகள் இருந்தன [.partially burnt papers that had Bangla script, some of which mention words and phrases such as “mujahid” and “salaam to our brothers in Chechnya”. Police said the pamphlets also mention “Zawahiri”, the al Qaida leader Ayman Al Zawahiri].
இப்படி பெரிய அதிகாரிகள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கும் போது தான், போலீஸார் ஒருவேளை அப்படி நடந்து கொண்டார்களா, என்ற கேள்வியும் எழுகின்றது.
Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast.
Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast. Courtesy – twocircles
மதரஸாவில் குண்டுகள்ஆயுதங்கள் முதலியவை எப்படிஇருக்கும்?: குறிப்பிட்ட வீடு மாநில சி.ஐ.டி எட்டு நாட்களுக்கு 08-10-2014 முன்னர் சீல் வைத்துவிட்டு சென்றனர், ஆனால், இப்பொழுது 16-10-2014 அன்று என்.ஐ.ஏ திறந்து சோதனை நடத்திய போது 30 வெடிகுண்டுகள், வெடி மருந்து மற்ற சம்பந்தப் பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன[4]. சிமுலியா [ madrasa at Simulia ] என்ற இடத்தில் இருந்த மத்ரஸாவில் தேடும் பணியில் ஈடுபட்டபோது தான் இவை கிடைத்துள்ளன. சிமுலியா கிராமம் பர்த்வான் மாவட்டத்தில், மங்கள் கோட் என்ற இடத்தில் உள்ளது. 12-10-2014 அன்று அங்கு நடத்திய சோதனையில் –
  • காற்று துப்பாக்கி மூலம் வெடிக்கப் பட்ட குண்டுகளின் பாகங்கள் [Air gun pellets],
  • கூர்மையான ஆயுதங்கள் [sharp-edged weapons],
  • பணம் பெற்றுக் கொண்டற்கான ரசீதுகள் [money receipts],
  • ஜிஹாதி இலக்கியங்கள் [jihadi literature],
  • குறிப்பாக நல்ல இறப்பை அடைவது எப்படி என்ற வங்காள மொழியில் உள்ள புத்தகம் [including a Bengali book titled, "How To Die A Good Death"],
முதலியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன[5]. இதனால், அந்த மதரஸா ஜிஹாதிகளின் மையமாக, தலைமையகமாக செயல்பட்டு வந்தது உண்மையாகிறது[6]. மேலும் முக்கிய குற்றாவாளியான யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்களும் கைது செய்யப் பட்டனர். ஹபிபுர் செயிக் என்பவன் அமீனா பீபி கொடுத்த எச்சரிக்கையின் படி கௌஸருடன் மூர்ஷிதாபாதில் உள்ள பாபர் பாக் என்ற மறைவிடத்திலுருந்து தப்பியோடி விட்டான். பிறகு  புதன் கிழமை அன்று போல்பூர் நகரத்தில் புறப்பகுதியில் முலுக் என்ற இடத்தில் பிடிபட்டான். இவன் கௌஸாரின் மைத்துனன், இந்த பயங்கரவாத கும்பலின் தீவிரமான வேலையாள், சிமுலியா மதரஸாவில் பயிற்சி அளிக்கும்  நிபுணர்களூள் ஒருவன் என்று பல அவதாரங்களைக் கொண்டுள்ளான்.[7].  மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று சொன்னால், சில முஸ்லிம்கள் சண்டௌக்கு வருகிறார்கள், இல்லை காரசாரமாக விவாதிக்க வருகிறார்கள், ஒரு நிலையில் மிரட்டவும் செய்கிறார்கள். ஆனால், இவ்வாறு நடக்கும் செய்திகள் வௌம் போது, மௌனியாகி விடுகிறார்கள்.
பர்கா பேக்டரி - கடை
பர்கா பேக்டரி – கடை
இன்னொரு வீட்டில் சோதனை: 08-10-2014 அன்று பாத்சாஹி தெருவில் உள்ள ரிஸ்வான் செயிக்கின் [Rizwan Sheikh] வீட்டை ரெயிட் செய்து, இரண்டு பெண்களை கைது செய்தனர். அப்பொழுது அந்த வீடு காலியாக இருந்தது. அங்கிருந்தவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் தான் ரெசூல் என்கின்ற ஜிஹாதி. ஆனால், 16-10-2014 அன்று தேசிய புலனாய்வு நிறுவனம் [the National Investigation Agency (NIA) ] மற்றும் தேசிய பாதுகாப்பு வீரர்கள் குழு [the National Security Guards (NSG) ] இவற்றின் மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் மாநில எதிர்கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ்காரர் சம்பந்தப் பட்டிருப்பதால், போலீஸும் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[8]. முதலமைச்சர் இவ்விசயத்தில் மெத்தனமாக இருப்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும் என்றில்லாமல், சம்பந்தப் பட்ட அரசியல்வாதிகளை பாதுகாக்க நடந்து கொள்வது போல தான், நிகழ்சிகள் அங்கு நடந்து வருகின்றன.

Thursday, 6 November 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (1)


Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph
Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph
பர்த்வான் குண்டுவெடிப்பும், மேற்கு வங்காள போலீஸாரின் நடவடிக்கையும்: காந்தி ஜெயந்தியான 02-10-2014 அன்று மேற்கு வங்காளத்தில் பர்த்வான் என்ற இடத்தில் கரக்கர் என்ற வீட்டில் குண்டு தயாரிப்பின் போது, யதேச்சையாக வெடித்ததில் 2 பேர் – ஷகீல் அஹமது காஜி [ Shakil Ahmed Gazi in Beldanga, Murshidabad] மற்றும் சோவன் மண்டல் [Sovan Mandal] கொல்லப்பட்டனர். இவ்விடத்தில் 90% முஸ்லிம்கள் வாழ்கின்றனர்[1]. அதாவது, அவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்துதான் வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. குண்டுவெடிப்பில் மேலும் செயிக் ஹகீம் காயமடைந்தான். கௌஸர் மற்றும் அப்துல் கலாம் என்பவர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் அந்த இடம், திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தின் மாடியில் இருந்தது. அதிலுருந்து நடந்து செல்லும் தூரத்தில் இன்னும் இரண்டு வீடுகளில் சோதனை நடத்தப் பட்டு, அங்கும் தீவிரவாதிகள் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விரைவு தயாரிப்பு வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள், சிம் கார்டுகள் [improvised explosive devices (IEDs), other explosives and SIM cards] முதலிய கைப்பற்றப் பட்டன. இவ்வீடுகள் பாபுகர் மற்றும் பாத்சாஹி தெருக்களில் உள்ளன[2].  இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் தெரிந்தது, யாரும் குண்டு வைத்து, இப்படி இறக்கவில்லை, ஆனால், வெடி குண்டு தொழிற்சாலையில், யதேச்சையாக குண்டு வெடித்ததில், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது, என்பது தெரிந்தது.
Burdwan_blast_building_
Burdwan_blast_building_
மேற்கு வங்க பொலீஸார் ஆதாரங்களை அழித்தனரா?: வெடி குண்டு தொழிற்சாலை என்றவுடன் போலீஸார், மேலிடத்தில் அறிவித்திருக்கலாம், அரசியல்வாதிகள் ஆதரவு-தொடர்பு என்றிருப்பதால், அது மறைக்கப் படவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கலாம். இதன் தீவிரத்தை ஆயும் முன்னரே, மேற்கு வங்காள போலீஸார் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை எழுப்பின. குறிப்பாக, குண்டுவெடித்த இடத்தில் உள்ள ஆதாரங்கள் திரட்டப் படவேண்டும், வெடிக்காமல் உள்ள குண்டுகள் ரசாயன ஆய்வு கூடத்திற்கு அனுப்பி ஆராயப் பட வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம், அந்த வெடிகுண்டுகளை யார் தயாரித்திருக்கக் கூடும், உபயோகப் படுத்தப் பட்ட பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும் போன்ற விவரங்கள் அறிந்து கொள்ல ஏதுவாகும். ஆனால், உடனே, ஆதாரங்கள் எதுவுமே கிடைக்காத அளவிற்கு குண்டுவெடித்த இடத்தை உள்ளூர் போலீஸார் சுத்தப் படுத்தி விட்டனர். கிடைத்த குண்டையும் வெடிக்கவைத்ததால், அதைப் பற்றிய ஆதாரங்கள் அறியமுடியவில்லை. மேற்கு வங்காள போலீஸார் வேண்டுமென்றே செய்ததாக தெளிவாகிறது.
Razia Bibi and Alima Bibi
Razia Bibi and Alima Bibi
கைது செய்யப் பட்டவர்கள்அவர்களைப் பற்றிய விவரங்கள்: சம்பந்தப் பட்ட விசயத்தில் இரண்டு பெண்கள் – ரஜிரா பீபி என்கின்ற ரூமி (Rajira Bibi alias Rumi) மற்றும் அமீனா பீபி (Amina Bibi) தொடர்பு கொண்டிருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நான்கு முறை குண்டுகளை [Improvised explosive device (IED)] எடுத்துச் சென்று தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக மொத்தம் கீழ் கண்ட நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர்:
  1. செயிக் ஹகீம் என்கின்ற ஹஸான் சாஹப் [Sheikh Hakim alias Hasan Saheb from Lalgola in Murshidabad district, who was injured in the blast]
  2. ஹாவிஸ் மொல்லா [Hafez Mollah alias Hasan], காயமடைந்தவர்களுள் ஒருவன்.
  3. ரஜிரா பீபி என்கின்ற ரூமி [Rajira Bibi alias Rumi, widow of the suspected terriost Shakil Ahmed who died in the blast] – ஷகீல் அஹமதின் மனைவி.
  4. அமீனா பீபி [Amina Bibi, Hasan Saheb's wife] – ஹசான் சாஹபின் மனைவி.
பர்த்வான் - கைது செய்யப் பட்டவர்கள்
பர்த்வான் – கைது செய்யப் பட்டவர்கள்
சம்பந்தப் பட்டுள்ளவர்களின் மற்ற விவரங்கள்:
ஷகீல் அஹமது: இவன் பங்களாதேசத்தைச் சேர்ந்தவன். ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ் என்ற ஜிஹாதி அமைப்பின் தீவிரவாத வேலையாள். 2006ல் இந்தியாவுக்கு வந்து கரீம்பூர், நாடியா மாகாணம் என்ற இடத்தில் தங்கியவன். மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் என்பவரை சந்தித்தான். அவருடைய மாமா பெண் – ரஜிரா பீபியை திருமணம் செய்து கொண்டான். அவளின் தந்தையை, தனது தந்தையாக – அடையாளமாக வைத்துக் கொண்டு ரேஷன் கார்டையும் பெற்றான். பேடங்கா (மூர்ஷிதாபாத்)வில், ஒரு பர்கா (முஸ்லிம் பெண்களுக்கு பர்தா போன்றவற்றை விற்கும்) கடையினையும் வைத்துக் கொண்டான்.

எஸ்.கேகௌஸர் – தேடப்பட்டு வரும் முக்கியமான குற்றவாளி. சிவப்பு நிற பதிவு செய்யப் படாத பைக்கை உபயோகப்படுத்தியவன்.  ஷகீலுக்கு உதவி செய்து, கரக்கர் வீட்டில் வேலையை ஆரம்பித்து வைத்தவவன். இவன் தான் ஷகீல் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ்  இடையே தொடர்பாளனாக வேலை செய்து வந்தவன்.

அப்துல் கலாம் – ஷகீலின் பர்கா கடைக்கு அடிக்கடி வந்து செல்பவன், கூட்டாளி.

அமீனா பீபி – ஹகீமின் மனைவி. சென்னை-மூவருடன் தொடர்பு கொண்டவள்.

ஹஸன் மொல்லா – புர்பஸ்தலி என்ற இடத்தில் உள்ள ஷூ – காலணி வியாபாரி. ஷகீலுடன் தொடர்பு கொண்டுள்ளவன். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அவனை ஏழு முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளான். செப்டம்பர் 2 மற்றும் 10 2014 தேதிகளில் ஷகீலுடன் அதிக நேரம் பேசியுள்ளான். பர்த்வானில் உள்ள ஷகீலின் வீட்டிற்கு வந்துள்ளான்.

மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் – நாடியாவில், கரிம்பூரில் வசிக்கும் முஸ்லிம் மதகுரு. உள்ளூர் மதரஸாவின் காரியதரிசி. ஷகீலுக்கு பாதுகாப்பாக ஒரு வீட்டைக் கொடுத்தவர், தனது மைத்துனியான ரூமியையும் திருமணம் செய்து கொடுத்தார். பிறகு அவனுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை முதலியவற்றையும் வாங்கிக் கொடுத்தார். முர்ஷிதாபாதில் இஸ்லாமிய ஆன்மீகத்தைத் தூண்டிவரும் மௌல்வியாக இருக்கிறார்.
கௌஸர் முதலியோர்
கௌஸர் முதலியோர்
வெடிகுண்டு வெடித்த வீடுமற்ற வீடுகளில் சோதனை: குண்டுவெடித்த வீட்டில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த ஒரு வீடியோவில், தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரித்து, வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர் என்ற காட்சியும் உள்ளது. தவிர அவர்களது ஜிஹாதி பிரச்சார இலக்கியங்களும் இருந்துள்ளன. மேலும் கொல்கத்தா விமான நிலையத்தைத் தாக்கும் திட்டத்தில் அவர்கள் இருந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3]. இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஒரு பர்கா கடை மற்றும் தொழிற்சாலை உள்ளது. அங்கு முஸ்லிம் பெண்களுக்கு வேண்டிய பர்தா போன்ற ஆடைகள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால்,ஆங்கிருந்த பெண்களே குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபயோகப் படுத்தப் பட்டது, ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. அப்பெண்கள் கொடுத்த விவரங்களை வைத்து மேலும் விசாரணை தொடர்ந்தது. இதைத்தவிர அசாமில் ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014
The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014 – Courtesy – twocircles
மேற்கு வங்காள போலீஸாரின் அறிக்கை: ஏற்கெனவே, இப்பிரச்சினை அரசியல் ஆக்கப் பட்ட நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மிர்சா தெரிவித்ததாவது: “பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதி கௌஸரை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியான 2 தீவிரவாதிகள், காயமடைந்த ஒரு தீவிரவாதி ஆகியோர் பயன்படுத்திய 2 வீடுகள், பாபூர்பர்க், பாத்சாஹி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த கக்ராகர் வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளன. அந்த வீட்டை கண்டுபிடித்து போலீஸார் சென்றபோது, அங்கு யாருமில்லை. வீட்டின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தன.  ஆனால், வீட்டினுள்ளே மின்விசிறிகள், விளக்குகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையால், அங்கு வசித்தவர்கள் அவசர கதியில் வெளியேறியது தெரிய வந்தது என்றார் மிர்சா. பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி கௌஸர் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை மத்திய அரசுக்கு மேற்கு வங்க மாநில அரசு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளது. மேற்கு வங்க டிஜிபி ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலை தெரிவித்தார்[5].

Monday, 27 October 2014

பழங்குடி மக்களின் நாளாக மாறிடும் கொலம்பஸ் நாள்

columbas1கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்கக் கண்டத்தில் பஹமாஸ் பகுதியில் கரையேறிய நாள் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 வது நாள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் நாளாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. அது அமெரிக்க நாட்டின் தேசிய விடுமுறை நாளாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க நாட்டிற்கு வைகிங் இன மக்கள் போன்ற சிலர் முன்னரே வந்து சென்றனர் என்று அறியப்பட்டாலும், பொதுவாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற ஐரோப்பியரே முதன் முதலில் ‘புதுஉலகம்’ எனப்படும் அமெரிக்க நாட்டைக் கண்டுபிடித்தார் என்று கருதப்பட்டு அவரை நினைவு கூரும் நாளாக இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
columbas4கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா, அரசர் ஃபெர்டினாண்ட் ஆகியோரின் நன்னம்பிக்கையையும் பண உதவியையும் பெற்று, ஸ்பெயின் நாட்டிற்காக இந்தியாவுடன் வணிகம் செய்ய ஒரு புதிய கடல்வழித்தடத்தைக் கண்டுபிடிக்க கடற்பயணம் மேற்கொண்டார். பொது ஆண்டு 1492 இல் தொடங்கி தொடர்ந்து பத்து ஆண்டுகளில் நான்கு முறை ஐரோப்பாவில் இருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியப்பெருங்கடலை அடைய விரும்பினார். ஆனால் அவர் ஒரு முறை கூட வெற்றியடையவில்லை என்பதுடன், அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர்கள் எனவும் அழைக்கத் துவங்கினார். இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப்பாதையைக் கண்டுபிடிக்கும் போட்டியில் அண்டை நாடாகிய போர்ச்சுகீசியர்களிடம் ஸ்பெயின் தோல்வி அடைய நேர்ந்தது. வாஸ்கோடகாமா பொது ஆண்டு 1498 மே, 17ல் இந்தியாவில் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார்.
இருப்பினும், ஸ்பெயின் நாடு அமெரிக்கக் கண்டத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டதற்கு கொலம்பஸ் செய்த உதவியே காரணம். அதனால், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தனையோ நாடுகளுக்கு ஸ்பெயின் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஸ்பானிஷ் மொழிதான் இந்நாட்களில் தேசியமொழியும் கூட.   கொலம்பஸ் செய்தது தவறான கணிப்பாக இருந்தாலும் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கக் கண்டத்தில் குடிபுக, ஆட்சி செய்ய ஒரு வழி வகுத்துக் கொடுத்து கடற்பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கொலம்பஸ் என்பதை மறுப்பதற்கில்லை.
கொலம்பஸ் வந்து செல்லும் வரை, ஐரோப்பியர்களுக்கு மேற்கில் ஒரு நிலப்பகுதி இருப்பதும், அங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிப்பதும், அந்த நிலத்தின் மேற்கு எல்லையாக பசிபிக் பெருங்கடல் இருப்பதும் தெரியாது. அட்லாண்டிக் கடலில் மேற்கு நோக்கிப் பயணித்தால் ஆசியக் கண்டத்தையும், சீன நாட்டின் கரையை அடையலாம் என்பதுதான் அவர்கள் எண்ணியிருந்தது.
கொலம்பஸ் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் என்ற கருத்தினால் இத்தாலி நாட்டில் இருந்து குடி பெயர்ந்து நியூயார்க் நகரில் வாழ்ந்த இத்தாலிய மக்கள் அவர் மீது பெருமதிப்பு கொண்டு, முதன் முதலாக அவர் அமெரிக்கா வந்தடைந்த 300வது ஆண்டு நிறைவு நாளான 1792 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியை “அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட நாள்” என மிகப் பெருமையுடன் கொண்டாடினார்கள். ஐரோப்பிய மக்களுக்குப் ஒரு புதிய வாழிடத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் அவர் என்று அப்படி ஒரு பெருமிதம் இத்தாலிய மக்களுக்கு.   பல நகரங்களிலும் தொடர்ந்து இக்கொண்டாட்டம் நடைபெறத் துவங்கியதும், குடியரசுத் தலைவர் பெஞ்சமின் ஹாரிசன் 1892 ஆம் ஆண்டு 400 வது ஆண்டின் கொண்டாட்டமாக அக்டோபர் 12 ஆம் தேதியைக் “கொலம்பஸ் நாள்” என அறிவித்தார். தொடர்ந்து சில ஆண்டுகள் பரவலாக அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அந்நாளைக் கொண்டாட, 1937 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அக்டோபர் 12 ஆம் தேதியை கொலம்பஸ் நாள் என நாடு முழுவதற்கும் தேசிய அளவில் விடுமுறை நாளாகவே அறிவித்தார். நீண்ட வார இறுதி விடுமுறையாகக் கொண்டாடும் பொருட்டு 1971 ஆம் ஆண்டு முதல் இது அக்டோபர் இரண்டாம் திங்களன்று கொண்டாடப்படுவதாக மாற்றப் பட்டது.
columbas3ஆனாலும் பல மாநிலங்கள் கொலம்பஸ் நாளை ஓர்அரசு விடுமுறை நாளாக அங்கீகரிக்க முன்வரவில்லை. இந்நாட்களில் பழங்குடியினர் அதிகமாக உள்ள மாநிலங்கள் பல அந்நாளை ‘பழங்குடியினர் நாள்’ என மாற்றி, அமெரிக்க பழங்குடியினரின் கலாச்சாரத்தையும் அவர்களது துன்பங்களையும் மதிக்கும் நாளாக கொண்டாடுகின்றன. அரசு தேசிய விடுமுறை நாளாக அறிவித்தாலும் தேசியஅரசு அலுவலகங்கள் மட்டுமே அன்று விடுமுறை எடுக்கும் அளவிற்கு இந்நாள் மிகக் குறைந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரும்பான்மையான மக்களும் இந்நாளைப் பொருட்படுத்துவதில்லை. அனைத்திற்கும் மேலாக கொலம்பஸ் நாள் கொண்டாடுவது இப்பொழுது ஒரு சர்ச்சைக்குரிய நாளாகவும் ஆகிவிட்டது.   இந்நாளை எதிர்ப்பவர்கள் அவர்கள் எதிர்ப்பிற்குப் பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.   முக்கியமான சில மறுப்புக் கருத்துகள்:
columbas61. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை. அது ஒரு புதிய, மக்களே வாழ்ந்திராத ஒரு நிலப்பரப்பாகவும் அவர் வந்திறங்கிய பொழுது இருந்ததில்லை. அங்கு முன்னரே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க அமெரிக்காவைக் கொலம்பஸ் கண்டுபிடித்தார் என்று கூறுவது மிகத் தவறான வரலாற்றுச் செய்தி.
2. கொலம்பஸ் நாள் என்று கொண்டாடும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. அவர் செய்ததெல்லாம் இங்கு வாழ்ந்த மக்களை அடிமைப் படுத்தியதும், படுகொலை செய்ததுதான். அவரது வரவு பழங்குடி மக்களின் கலாச்சார அழிவைத்தான் துவக்கி வைத்தது. ஆகவே இதனை மகிழ்ந்து கொண்டாடத் தேவையில்லை.
3. தற்காலத்தில் இந்தக் கொண்டாட்டம் இங்குள்ள மக்களுக்குள் கலாச்சார பேதத்தை உருவாக்குகிறது. நாட்டின் பழங்குடி மக்களை அவமானப்படுத்துகிறது.
4. பள்ளியில் வரலாறு என்ற பெயரில் மாணவர்களுக்கு பொய்யுரைகள் வழங்கப்படுகிறது. கொலம்பஸ் உலகம் உருண்டை என்று தெரிந்து கொண்டதாகவும், துணிச்சலுடன் தனது குழுவினரை வழி நடத்தி புதிய உலகம் கண்டுபிடித்ததாகவும், அவர்கள் தொலைநோக்கிகளைக் பயன்படுத்தியதாகவும் (அவரது கடற்பயணம் நிகழ்ந்த பிறகு ஒரு நூற்றாண்டு கழித்துதான்தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது) உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பல குழந்தைகள் மனதில் திணிக்கப்படுகிறது.
5. பள்ளிகளில் சொல்வதற்கு மாறாக கொலம்பஸ் காலத்திற்கு முன்னரே பலர் உலகம் உருண்டை என்பதை அறிந்திருந்தார்கள். கிரேக்க அரிஸ்டாட்டில் அதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் சுட்டிக் காட்டியதுடன், நிலவில் விழும் புவியின் நிழலின் அளவை அடிப்படையாகக் கொண்டு புவியின் சுற்றளவையும் கணக்கிட்டுள்ளார்.
மேற்காட்டியது போன்ற தவறான தகவல்களை மக்களிடம் திணிக்கும் காரணத்தினால் பொறுமை இழந்த சியாட்டில் நகர மக்கள் நகரசபையிடம் வாதிட்டு அந்நாளைப் ‘பழங்குடி மக்களின் நாள்’ என மாற்றும்படி முறையிட்டனர். தீவிர விவாதத்திற்குப் பிறகு வரலாற்றைத் திரித்து பழங்குடியினரை அவமதிக்கும், பொய்வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கும் இந்த நாள் இனிமேல் பழங்குடியினர் நாள் எனக் கூறப்படும் என்றும், பழங்குடி மக்கள் கலாச்சாரத்தைக் காக்கும் போராட்டங்களை மதிக்கும் நாளாகப் போற்றப்படும் என்றும் இந்த மாதம் சியாட்டல் நகரசபையால் அறிவிக்கப்பட்டுவிட்டது.
[ பார்க்க காணொளி: http://www.cnn.com/video/data/2.0/video/politics/2014/10/13/dnt-seattle-changes-columbus-day-name.king.html ]
சியாட்டில் நகரைப் போன்றே மின்னியாபோலிஸ் நகரமும் இந்நாளை பழங்குடியினர் நாள் (“Indigenous People’s Day”) என அறிவித்துவிட்டது. போர்ட்லாண்ட், சியாட்டில் நகரப் பள்ளிகள் கொலம்பஸ் நாளுடன் பழங்குடியினர் நாளும் சேர்த்தே கொண்டாடப்படும் என அறிவித்துள்ளன. தெற்கு டக்கோட்டா மாநில மக்கள் ‘அமெரிக்கப் பூர்வீக குடியினர் நாள்’ (Native American Day) என்றும், ஹவாய் மாநிலம் பொதுவான கோணத்தில் ‘கண்டுபிடிப்பாளர்கள் நாள்’ (Discoverer’s Day) எனவும் முன்னரே அறிவித்துள்ளன. மேலும் சில தென்னமெரிக்க நாடுகள் மக்களின் கண்டனத்திற்குச் செவி சாய்த்து ஹிஸ்பானிக் மக்களின் கலாச்சார பரவலைக் கொண்டாடும் நோக்கில் ‘டியா டி ல ராசா’ (Dìa de la Raza – “Day of the Race”) என்றும், எதிர்த்து நின்ற பழங்குடி மக்களின் வாழ்வியல் வரலாற்று நாளாக ‘டியா டி லா ரெசிஸ்டென்ஸ்சியா இன்டிஜெனா’ (Dìa de la Resistencia Indìgena – “Day of Indigenous Resistance”) என்று மாறுதல்கள் செய்து கொண்டாடுகின்றன.
அமெரிக்க பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பிழையான செய்திகளின் தொகுப்பும் அதற்கான சரியான விளக்கங்களும் …
கொலம்பஸ் இத்தாலியர் என்பது பிழையானது. கொலம்பஸ் இத்தாலியில் பிறக்கவில்லை. இத்தாலி என்ற நாடு உருவானதே 1861 ஆம் ஆண்டில்தான். கொலம்பஸ் பிறந்த 1451 ஆண்டு அக்டோபர் மாதம் அவர் பிறந்த பகுதி அந்நாளைய ஜெனோவா குடியரசின் பகுதியாக இருந்தது. பிறகு அப்பகுதி பிரான்ஸ் நாட்டின் வசமானது. பிற்காலத்தில்தான் இப்பகுதி இக்காலத்தில் உருவான இத்தாலி நாட்டின் பகுதியாக மாறியது. எனவே கொலம்பஸ் இத்தாலி நாட்டில் பிறந்து இத்தாலி நாட்டிற்காகக் கடற்பயணம் மேற்கொள்ளவில்லை.
கொலம்பஸ் அப்பகுதியில் பிறந்தாலும், கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டிற்காக, அந்நாட்டின் வணிக நோக்கம் காரணமாக 1492 முதல் 1503 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நான்கு முறை அமெரிக்க கண்டத்திற்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து கடற்பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட காரணமும் இப்பொழுது முன்வைக்கும் காரணமான ஐரோப்பியர் வாழ புது நிலம் கண்டுபிடிப்பதற்காகவும் அல்ல. இந்தியாவுடன் வணிகம் செய்வதற்கு ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிப்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது. ஆனாலும் அவர் கண்டுபிடித்த நிலபரப்பும் இந்தியா அல்ல, அத்துடன் அவர் இந்தியர் என அடையாளம் கண்ட மக்களும் இந்தியர்கள் அல்ல. அவர்கள் அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர். கொலம்பஸின் பயணத்தினால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாடுதான் அமெரிக்கக் கண்டத்தில் பலகுடியிருப்புகளை ஏற்படுத்தி பலன் கண்டது.
அத்துடன், முதன்முதலில் அமெரிக்க கண்டத்திற்கு வந்த ஐரோப்பியரும் கொலம்பஸ் அல்ல. அவர் வருவதற்கும் 500 ஆண்டுகளுக்கு முன்னரே ‘லீஃப் எரிக்சன்’ (Leif Erikson, 970- 1020) என்ற ஐஸ்லாந்து பகுதி கடற்பயணி ஒருவர் அமெரிக்க கண்டத்திற்கு வந்து சென்றுவிட்டார். நியூ ஃபௌன்ட்லாண்ட் பகுதியில் அந்த வைகிங் இன மக்கள் குடியிருப்புகளையும் ஏற்படுத்தினர். மற்றொரு சீன கடலோடியும் அமெரிக்காவின் மேற்குக் கரையை கொலம்பஸிற்கு முன்னரே அடைந்த தகவலும் உள்ளது. ஐரோப்பியர்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆசிய மக்கள் இரு கண்டங்களையும் இணைக்கும் நிலப்பகுதி வழியாக அமெரிக்க கண்டத்திற்கு குடிபெயர்ந்து பல பழங்குடி இனங்களாக மாயன், அஸ்டெக், இன்கா இனங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், கற்கால மனிதர்களின் ஆயுதங்களும் இங்கு கிடைப்பதும் அறிவியல் கூறும் உண்மை.
இதனால்,   1492 ஆம் ஆண்டு வாக்கில் சாண்டா மரியா, நின்யா, பின்டா என்ற மூன்று கப்பல்களில் தனது குழுவினருடன் கொலம்பஸும் அமெரிக்கா வந்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அதைவிடுத்து, அவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று சொல்வது அபத்தமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பகுதியை, அதாவது கப்பலில் இருந்து படகை கரை நோக்கி செலுத்தி கரையிறங்கும் பொழுது, அங்கு கரையில் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருக்க, தனது கையில் உள்ள கொடியை நாட்டி, நான் இந்த இடத்தைக் கண்டுபிடித்தேன் என அவர் கூறினால் அது ஒரு வரலாற்றுப்பிழை.
கொலம்பஸைப் பற்றி கூறப்படும் தகவல்களில் மறைக்கப்படும் பல வரலாற்றுத் தகவல்கள் …
1. அவர் ஸ்பெயின் அரசியிடம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி நான்கு முறை கடற்பயணம் செய்தும் இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்காமல் அதில் தோல்வியைத்தான் அடைந்தார் என்பதும்,
2. அவர் தனக்குத் தங்கம் கொணர மறுத்த மக்களைச் சித்திரவதைகள், படுகொலைகள் பல செய்தவர், சிறுமிகளை பாலியல் அடிமைகளாக விற்றவர், பழங்குடி மக்களை அடிமைகளாக நடத்தியதுடன், முதன் முதலில் எதிர்கொண்ட பழங்குடி மனிதரையே கைதியாக்கி தனது வெற்றியைப் பறைசாற்றும் ஓர் அடையாளமாக ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றவர் என்பதும்,
3. ஏமாற்றுக்காரர் மற்றும் கொள்ளைக்காரர், தங்கத்தைத் தேடும் தனது முயற்சியில் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை பெருமையாக சொல்லிகொண்டவர், தான் நினைத்தால் பழங்குடிகளை அழிக்கமுடியும் என அகம்பாவத்துடன் தனது நாட்குறிப்பிலும் குறித்து வைத்தவர், இது போன்ற குற்றங்களுக்காக கைகால்களில் விலங்கிடப்பட்டு, ஆளுநர் பதவி பறிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும்,
4. அவரது அமெரிக்கப் பயணம் ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஐரோப்பியர்களையும், அவர்கள் வரவால் அவர்கள் தங்களுடன் பல தொற்று நோய்களையும் கொணர்ந்ததில் பழங்குடியினர் பலர் உயிரிழக்க நேரிட்டதும், அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த 90 விழுக்காடு பழங்குடி மக்களும், அம்மக்களின் கலாசாரமும், மதமும், மொழிகளும் அவர்களால் அழிக்கப்பட்டன என்பதுவும்,
5. கொலம்பஸ் துவக்கி வைத்த ஐரோப்பியக் குடியேற்றத்தின் துவக்கம் அங்கு வாழ்ந்த மண்ணின்மைந்தர்களின் துன்பங்களின் துவக்கத்திற்கு காரணமானது, அவர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலை ஏற்பட்டு, அவர்களது வாழிடங்களைப் பறித்து அவர்களுக்கான முகாம்களை உருவாக்கி அங்கு அவர்களை விரட்டி சிறைப்படுத்தவும், பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பிரித்ததுவும், இன்றுவரை பழங்குடி மக்களை நடத்துவதில் அமெரிக்க மண்ணில் பேதங்கள் நிலைத்திருக்கிறது என்பதுவும் போன்ற தகவல்கள் மறைக்கப்படுகின்றன.
columbas2இவ்வாறு தற்கால அமெரிக்காவில், கொலம்பஸ் ஓர் இணையில்லா வரலாற்று நாயகனா அல்லது மனித குல எதிரியா என சர்ச்சை செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதற்கு உலக மக்களின் மனித பண்பாட்டு விழுமியங்களில் (human values ) காலப்போக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமான மாறுதல்களே காரணம். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொலம்பஸ் கையாண்ட கொத்தடிமைப்படுத்துதல், இனப்படுகொலைகள், பண்பாட்டுச் சிதைப்புகள் ஆகியவை அக்கால மக்களால் தவறாக கருதப்பட வாய்ப்பிருக்கவில்லை. உண்மையில் பல ஐரோப்பியர்கள் தங்கள் கிறிஸ்துவ மதமே மக்களை மீட்டெடுக்க வந்த மதம் என்று நம்பினார்கள். அவர்கள் நினைத்ததற்கு மாறான வழியில் வாழ்பவர்களை ‘காட்டுமிராண்டிகள்’ என்று அவர்கள் முத்திரை குத்தத் தவறியதில்லை. அத்துடன் அவர்கள் கண்ணோட்டத்தில் இவ்வாறு ‘வழிதடுமாறிச் செல்லும்’ மக்களைக் காப்பது அவர்கள் பொறுப்பு எனவும், தங்களைப் போல அம்மக்களை நாகரீக மக்களாக மாற்றுவது அவர்களது கடமை எனவும் ஆணித்தரமாக நம்பினார். பிற இன மக்களை அடிமைப்படுத்துவதோ, பாலியல் வன்முறை செய்வதோ,   மதம் மாற்றுவதோ, அவர்கள் கலாச்சாரத்தைச் சீர்குலைவு செய்வதோ, இனப்படுகொலைகள் செய்வதோ மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றே பலர் உணராது இருந்தனர். அக்குற்றங்கள் புரிபவர்களை, தங்களது இனம், மொழி, மதத்தின் பொருட்டு அரும்பணியாற்றும் நாயகர்களாகவும் போற்றினர். காலத்தின் மாற்றம் காரணமாக முன்னர், இச்செயல்களில் ஈடுபட்ட முன்நாள் வரலாற்று நாயகராகப் பார்க்கப்பட்ட கொலம்பஸ் இன்று மனித குல எதிரியாகப் பலருக்குத் தோற்றம் அளிக்கிறார்.
இந்நிகழ்ச்சிகள் உணர்த்துவது, காலம் மாறிவிட்டது என்பதையும், உலகம் முழுவதும் வரலாறுகள் மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்பதையும்தான். அவ்வாறு வரலாற்றை மீள்பார்வை செய்யும் பொழுது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் புதிய பண்பாட்டு விழுமியக் கண்ணோட்டத்தில் மனித குலத்திற்கு எதிரான அருவருக்கத் தக்க செயலாக தற்கால மக்களால் உணரப்படுகின்றன. கடந்தகாலத் தவறுகளை சீர் செய்யும் முயற்சி மக்களின் மனதில் வேரூன்றத் தொடங்கியதையே கொலம்பஸ் நாளைக் கைவிடும் நோக்கம் தெளிவு படுத்துகிறது. மனிதகுல வரலாற்றில் மனிதர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கு, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருவது முக்கியத்துவம் பெற்றிருப்பது இதிலிருந்து கண்கூடு. இது ஒரு பண்பாட்டு பரிணாம வளர்ச்சி, இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம்.
_____________________________________________________________________________________
மேலதிகத் தகவல்கள் வழங்கும் இணையதளங்களின் பட்டியல்:
Christopher Columbus
http://en.wikipedia.org/wiki/Christopher_Columbus
Christopher Columbus
http://academickids.com/encyclopedia/index.php/Christopher_columbus
Leif Erikson
http://en.wikipedia.org/wiki/Leif_Erikson
What to tell your kid about Christopher Columbus, By David M. Perry, October 11, 2014
http://edition.cnn.com/2014/10/10/opinion/perry-columbus-day-what-to-tell-your-kid/index.html
Instead of Columbus Day, some U.S. cities celebrate Indigenous People’s Day, By Emanuella Grinberg, October 13, 2014
http://edition.cnn.com/2014/10/12/living/columbus-day-indigenous-people-day/index.html
History vs. Christopher Columbus – Alex Gendler
http://youtu.be/GD3dgiDreGc
Ask HISTORY: Did Columbus Really Discover America?
Did Columbus really discover America? Get the full story.

Thursday, 16 October 2014

The Hindu genocide that Hindus and the world forgot

When we can rise our voice for 2,000 Muslims killed in Gujarat, we must cry from the rooftops for 2.4 million Hindus killed in 1971 or the 250,000 Kashmiri Pandits forced out of their homes in Kashmir. Why do we not? 

Public memory is short and fleeting. Events register momentarily like a blip on a radar and are then consigned to some dark corner of our cerebral galaxy. The brain needs to be bombarded with repetitive stimuli or jolted by a single moral turpitude of seismic proportions to evoke a strong and sustained re-sponse. In the absence of such reinforcement, a thought fades away from ones mind and that is the unfortunate tragedy of the Bangladesh genocide.

To ascertain the etiology of this amnesia or selective attention deficit we need to delve deeper into the details of this gory chapter of South Asia. In a massive military operation, code named Operation Searchlight aimed at crushing Bengali aspirations of autonomy, the Pakistan army in March of 1971 unleashed a deadly reign of terror that killed about 3 million Bangladeshis and forced another 10 million to seek refuge across the border in India. 

Estimates of the actual numbers vary from a ridiculous low 26,000 put out by the Pakistan government (Hamood-ur-Rahman Commission) to a high of 3 million circulating in the international media. In a preface to this massacre, Yahya Khan, the military dictator of Pakistan at that time is supposed to have remarked: “Kill 3 million of them and the rest will eat out of our hands.” (Pierre, Stephen and Robert Payne (1973), Massacre, New York: Macmillan, p 50).  The official position from Bangla-desh concurs with the figure of 3 million.

R.J. Rummel in his book, Statistics of Democide: Genocide and Mass Murder Since 1900 (ch.8) concludes: “Consoli-dating both ranges, I give a final estimate of Pakistan’s democide to be 300,000 to 3,000,000, or a prudent 1,500,000.” Even this figure of 1.5 million places this massacre high up in the list of notable world genocides. While the number killed by the Khmer Rouge in Cambodia (in excess of 2 million) may top the Bangladesh genocide, it was carried out over a period of four years in comparison to the nine-month deadly rampage of the Pakistan army: a chilling testimony to the awesome brutality of this massacre.
Who bore the brunt of this genocide? Was it the Bengali Muslims? Were the Bengali Hindus selectively targeted? Or did both communities suffer equally? It is important to know the actual distribution of the casualties for therein may lay the clue to the big unanswered question: Why were the guilty not brought to book?
The killings were not random acts of response to a mass uprising but a meticulously crafted strategy of selective victimization as Rummel indicates in his book: “In East Pakistan (now Bangladesh) (General Agha Mohammed Yahya Khan and his top generals) also planned to murder its Bengali intellectual, cultural, and political elite. They also planned to indiscriminately murder hundreds of thousands of its Hindus and drive the rest into India. And they planned to destroy its economic base to insure that it would be subordinate to West Pakistan for at least a generation to come. This despicable and cutthroat plan was outright genocide.”

A report in the Sunday Times, London (June 13, 1971) corroborates the existence of such a diabolical blueprint: “The government’s policy for East Bengal was spelled out to me in the Eastern Command headquarters at Dacca. It has three elements: 1. The Bengalis have proved themselves unreliable and must be ruled by West Pakistanis; 2. The Bengalis will have to be re-educated along proper Islamic lines. The — Islamization of the masses — this is the official jargon — is intended to eliminate secessionist tendencies and provide a strong religious bond with West Pakistan; 3. When the Hindus have been eliminated by death and fight, their property will be used as a golden carrot to win over the under -privileged Muslim middle-class. This will provide the base for erecting administrative and political structures in the future.”

In a report submitted to the US Senate Judiciary Commit-tee (November 1, 1971) Senator Edward Kennedy further confirms this persecution of Hindus: “Field reports to the US government, countless eye-witness journalistic ac-counts, reports of international agencies such as World Bank and additional information available to the subcommittee document the reign of terror which grips East Bengal (East Pakistan). Hardest hit have been members of the Hindu community, who have been robbed of their lands and shops, systematically slaughtered, and in some places, painted with yellow patches marked ‘H.’ All of this has been officially sanctioned, ordered and implemented under martial law from Islamabad.”

An article in Time magazine dated August 2, 1971 titled Pakistan: The Ravaging of Golden Bengal (external link) categorically concluded: “The Hindus, who account for three-fourths of the refugees and a majority of the dead, have borne the brunt of the Muslim military hatred.”

All this evidence clearly indicates that the Hindu community of Bangladesh was the specially culled out by the Pakistan army for this inhuman treatment. Coming to specifics, let us see whether we can ascertain with a fair degree of accuracy, the ball park figures for the Hindus killed or driven from their homes.
In the senate judiciary committee report, Kennedy indicates that 80 percent of the refugees were Hindu that is 8 of the 10 million; a figure in line with the Time magazine report that suggests that three-fourths of the refugees were Hindu.

The percentage figures follow the same pattern when we look at the people killed. Shrinandan Vyas in an article in The Hindu titled Hindu Genocide in East Pakistan uses population statistics from the Bangladesh Ministry of Planning, Bureau of Statistics to extrapolate the number of Hindus killed by the Pakistan army: a mind-numbing figure of 2.4 million equivalents to 80 percent of the overall total of 3 million emerges. 

While this is not an attempt to underplay or trivialize the sacrifices of Bangladeshis as a whole (Muslim intellectuals were also killed in large numbers), it cannot be denied that the Hindu community of Bangladesh accounted for an astronomically disproportionate share of the dead and paid a price that was more than its due.

A crime like genocide usually involves established institutions like governments or nations. For the criminals to be brought to book one needs a dedicated champion like the legendary Nazi hunter, Simon Wiesenthal, or a driven community who share a commonality with the victims and will not let the perpetrators to rest. The Hindu community has neither.

Logically it would fall upon the Bangladesh government to relentlessly pursue the executors of this horrific massacre. After some half-hearted attempts in the immediate post — 1971 periods, the Bangladesh government has relegated this issue to a back burner. Why they have done so is intriguing? Does it have to do something with Islamic brotherhood and the fact that the victims happened to be predominantly Hindu?

What about the Hindus themselves? The Hindus, wherever they maybe, are afflicted with a strange psychic malady that inhibits them from standing up for their rights or highlighting  atrocities committed against them. Moreover those Hindus, who do so are shouted down by their own brethren. However, in defense of Bangladeshi Hindus, I must say that the continued oppressive religious environment in that country makes any such protest impossible, especially with their limited numbers.

The only other lobby with a special interest in this matter was predominantly Hindu India. I have always felt that India owes a moral responsibility to the Hindus left behind in Pakistan and Bangladesh in 1947. While the Muslim minority of India became a part of a secular republic with equal rights, the Hindu minority of Pakistan (and later Bangladesh) were relegated to second class status through no fault of theirs.

Could India with its famed free and secular media have played a key role? Yes, it certainly could have. And should have. But did not.  

To side with Hindus even if they are right is akin to blasphemy in the vaunted circles of the free Indian media. How else can you explain the relentless crusade against the Gujarat riots that persists even to this day in comparison with the near total silence on the monumental genocide that obliterated 2.4 million Hindus from the face of the earth or the shoddy treatment meted out to the continued ethnic cleansing of a quarter million Hindus from Kashmir? 

All atrocities regardless of the color, caste, creed or religion of the victims must be condemned fair and square and the perpetrators relentlessly pursued till eternity if need be and brought to book. When we can raise your voice for 2,000 Muslims, (the official figures are much less) killed in Gujarat and we should, we must cry from the roof tops for 2.4 million Hindus killed in 1971 or the 250,000 Kashmiri Pandits forced out of their homes in Kashmir. Why do we not?